சோ. உ. எதிர்மன்னசிங்கம்
சோமசுந்தரம் உடையார் எதிர்மன்னசிங்கம் (Somasunderam Udayar Ethirmanasingham, சூலை 25, 1915 - ) இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கைஎதிர்மன்னசிங்கம் 1915 சூலை 25 இல் பிறந்தவர்.[1] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர். சென் மேரீஸ் கல்லூரி, கல்முனை உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2] இவரது உடன்பிறந்தவரான சோ. தம்பிராஜா பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1970-77 வரை இருந்தவர். அரசியலில்எதிர்மன்னசிங்கம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்டு 900 வாக்குகளால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இராசமாணிக்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட சி. மூ. இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[4] ஆனாலும், 1956 தேர்தலில் மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] மார்ச் 1960 தேர்தலில் இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[6] சூலை 1960, 1965 தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia