தஞ்சாவூர் மேலவாசல் ரங்கநாதர் கோயில்
![]() தஞ்சாவூர் மேலவாசல் ரங்கநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள வைணவக் கோயில்களில் ஒன்றாகும். அமைவிடம்இக்கோயில் மேலவீதியின் அருகே மேல் வாசலில் கொங்கனேசுவரர் கோயிலுக்குப் பின் புறம் உள்ளது. இக்கோயிலின் வலது புறம் மேலவாசல் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] மூலவர்இக்கோயிலின் மூலவர் ரெங்கநாதர் ஆவார். இறைவி ரங்கநாயகி ஆவார். அமைப்பு![]() வாயில், முன் மண்டபம், மூலவர் கருவறை, அம்மன் கருவறை, மூலவர் விமானம், அம்மன் விமானம் என்ற அமைப்புகளைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்ததும் உள்ளே இடதுபுறம் மூலவர் ரங்கநாதர் கிடந்த கோலத்தில் காணப்படுகிறார். மூலவர் சன்னதிக்கு இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. மூலவருக்கு எதிராக மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதி, அனுமார் சன்னதி, ராமானுஜர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. நவநீத சேவைநவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். குடமுழுக்குஇக்கோயிலில் 4 சூன் 2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia