தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)
தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் புது தில்லி ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் என் ஐ ஏ செயல்படுகிறது.[4] இதன் தற்போதைய தலைமை இயக்குநர் திங்கர் குப்தா, இகாபா ஆவார். இதன் கிளைகள் நாடு முழுவதும் 14 நகரங்களில் உள்ளது.[5] பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரணை செய்வதற்கு மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.[6][7][8] இதன் முதல் தலைமை இயக்குநர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து எஸ். சி. சின்கா தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தலைமை இயக்குநராக ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார். தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா 2019தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா[9] நாடாளுமன்றத்தில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டது. தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் ஏற்கனவே 2008-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.[10] தற்போது தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆட்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. நோக்கம்தேசிய புலனாய்வு முகமை சிறந்த சர்வதேச தரங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு முழுமையான தொழில்முறை புலனாய்வு நிறுவனமாக செயல்படுவது. மிகவும் பயிற்சி பெற்ற, கூட்டாண்மை சார்ந்த பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் தேசிய அளவில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிற விசாரணைகளில் சிறந்த தரங்களை அமைப்பதை என் ஐ ஏ நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள மற்றும் சாத்தியமான பயங்கரவாத குழுக்கள்/தனிநபர்கள் தடுப்பை உருவாக்குவதை என் ஐ ஏ நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பயங்கரவாதம் தொடர்பான அனைத்து தகவல்களின் களஞ்சியமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயல்பாடுகள்
கிளைகள்என் ஐ ஏ தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. நாடு முழுவதும் 14 நகரங்களில் இதன் கிளைகள் உள்ளது.
என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றங்கள்என் ஐ ஏ வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 45 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளது.[11] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia