நமோகார மந்திரம் அல்லது நவ்கார மந்திரம் என்பது சைன சமயத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மந்திரமும் தொடர்ந்து பயன்பாட்டிலிருந்து வரும் மிகப் பழமையான மந்திரமும் ஆகும்.[1][2] இதுவே சைனர்கள் தியானம் செய்யும்போது கூறும் முதல் வழிபாடு ஆகும்.இம் மந்திரம், பஞ்ச நமசுகார மந்திரம், நமசுகார மந்திரம், நவகார மந்திரம் அல்லது பரமேட்டி மந்திரம் எனப் பலவாறு கூறப்படுகிறது.
நமோகார மந்திரத்தின் வரிக்கு வரியான பொருள் கீழே தரப்பட்டுள்ளது. இதன் மூலம், வழிபாட்டாளரொருவர் முதலில் ஐந்து உயர்ந்த உயிர்கள் அல்லது பஞ்சப் பரமேட்டிகளை வணங்குவார்.
அருகர்— நான்கு கொடிய கர்மாக்களை அழித்தோர்
சித்தர் — "சித்தி"யை அடைந்தோர்
ஆச்சாரியர் — ஒருவர் எவ்வாறு வாழவேண்டும் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் (ஆசாரிய - ஆசாரணைப் பயில்விப்போர்)
சாது — சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற துறவிகளும் முனிவர்களும்
மேலும், இவ்வைந்து உயர்ந்த உயிர்களையும் வணங்குவதனால்,
தனது எல்லாக் கர்மாக்களும் அழிக்கப்பட்டு,
அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற்றிட வேண்டும் எனவும்,
இம் மந்திரம் மிகவும் புனிதமானது எனவும் இவ் வழிபாட்டாளர் கூறுவார்.
இங்கு எந்தவொரு குறிப்பிட்ட கடவுள்களினதோ அல்லது நபர்களினதோ பெயர்கள் இடம்பெற மாட்டாது. இவ் வழிபாடு கடவுள்கள், ஆசிரியர்கள் அல்லது புனிதர்களது குணங்கள் (நல்லியல்புகள்) குறித்த வேண்டுதலாகவே அமையும். சைனர்கள், தீர்த்தங்கரர்களிடமோ அல்லது துறவிகளிடமோ எந்தவொரு பொருள்சார்ந்த வேண்டுதல்களையோ விருப்பங்களையோ எதிர்பார்ப்பதில்லை. இம் மந்திரத்தைக் கூறுவதன் மூலம், ஆன்மீக வழியில் முன்னேறிய நபர்களுக்கு உயரிய மரியாதையைச் செலுத்துவதும், மக்களுக்கு அவர்தம் இறுதிக் குறிக்கோளாக இருக்கவேண்டிய மோக்சத்தை (விடுதலை) அடைதலை வலியுறுத்துதலுமே சைனர்களின் நோக்கமாகும்.[4]
நவ்கார மந்திரத்தில் 68 எழுத்துக்கள் உண்டு.
வரலாறு
உதயகிரிக் குன்றுகளிலுள்ள காரவேல மன்னனின் அத்திக்கும்பாக் கல்வெட்டு
நமோகார மந்திரம் சைன இலக்கியங்களில், ஓம் நம சித்தானம் (6 அசைகள்), ஓம் ந்கி (2 அசைகள்), அல்லது வெறுமனே ஓம் (1 அசை) ஆகக் குறுக்கப்பட்டிருக்கும்.[7]
தியானம்
பஞ்சப் பரமேட்டிகளை (ஐந்து உயரிய உயிர்கள்) வேண்டுதல்
தலையாய சமண நூல்களில் ஒன்றாகிய, திரவிய சங்கிரகத்தின் படி:
ஐந்து உயரிய உயிர்களின் (பஞ்ச-பரமேட்டி) பண்புகளைப் போற்றியவாறு, முப்பத்தைந்து, பதினாறு, ஆறு, ஐந்து, நான்கு, இரண்டு மற்றும் ஓரெழுத்துக்களாலான புனித மந்திரங்களைத் தியானிக்குக, ஓதுக அல்லது உச்சரிக்குக. மேலும், ஆசிரியனின் (குரு) கற்பித்தலுக்கிணங்க ஏனைய மந்திரங்களைத் தியானிக்குக மற்றும் ஓதுக.[8]
↑Jaina, Ravīndrakumāra and Kusuma Jaina (1993). A Scientific Treatise on Great Namokar Mantra. Delhi: Arihant International, Keladevi Sumatiprasad Trust. ISBN81-7277-029-4.
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.