நம்பியூர்
நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது அமைவிடம்நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கி.மீ.; வடக்கில் சத்தியமங்கலம் 26 கி.மீ.; தெற்கில் அவிநாசி 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [6] பள்ளிகள்நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கோவில்கள்நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia