நாம்தாரி
நாம்தாரிகள் (Namdharis) (குர்முகி: ਨਾਮਧਾਰੀ; தேவநாகரி: नामधारी) என்பதற்கு குரு அல்லது இறைவனின் பெயர்களை நாம ஜெபம் செய்பவர்கள் என்று பொருள். சீக்கியத்தில் நாம ஜெபம் செய்பவர்களை குகா என்று அழைப்பர்.[3] சீக்கியத்தின் ஒரு பிரிவினரான நாம்தாரி பிரிவினர், சீக்கியத்தின் பெரும்பான்மையாக பின்பற்றும் தத் கல்சா பிரிவினர் குரு கோவிந்த் சிங் (1666–1708) வரையான 10 குருக்களை மட்டுமே போற்றி வணங்குவர். ஆனால் நாம்தாரி சீக்கியப் பிரிவினர், பாலக் சிங் (1797–1862) 11வது குருவாக போற்றினர்.. நாம்தாரிகள் குரு நானக் முதல் தற்போதைய குரு உதய் சிங் வரை போற்றுகிறார்கள். [4] இவர்களின் 12 குரு ராம் சிங் குகா (1816–1885), நாம்தாரிகளின் மையமான பாய்னி சாகிப்பை லூதியானாவிற்கு மாற்றினார்.[5] பெயர்கள்இப்பிரிவு சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நாம்தாரி அல்லது குகா என இட்டுக்கொள்வர்.[6] கருத்தியல்பெரும்பான்மையாக சீக்கிய குருக்கள் 10 பேர் ஆவார். அவர்களில் இறுதி குரு குரு கோவிந்த் சிங் ஆவார். ஆனால் நாம்தாரி சீக்கியப் பிரிவினர் இக்கருத்தை ஏற்காது, தங்களது குரு பரம்பரை தொடர்ந்து வருவதாக கருதுகிறார்கள். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia