நிரலம்ப உபநிடதம்

நிரலம்ப உபநிடதம்
The text is a glossary of Vedantic terms
தேவநாகரிनिरालम्ब
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புநிரலம்பம்
உபநிடத வகைசாமான்யம்
தொடர்பான வேதம்யசுர் வேதம்[1]
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை41
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம்

நிரலம்ப உபநிடதம் (Niralamba Upanishad) என்பது ஒரு சமசுகிருத உரையும் இந்து சமயத்தின் 22 சமய (பொது) உபநிடதங்களில் ஒன்றுமாகும்.[2] இந்த உரை, சர்வசர உபநிடதத்துடன் இந்து தத்துவத்தின் 29 அடிப்படைக் கருத்துக்களில், பண்டைய மற்றும் இடைக்கால சகாப்தமான 108 உபநிடதங்களின் தொகுப்பில் உட்பொதிக்கப்பட்ட இரண்டு பிரத்யேக சொற்களஞ்சியங்களில் ஒன்றாகும். [3]

நிரலம்ப உபநிடதம் 29 உபநிடதக் கருத்துக்களை வரையறுத்து விளக்குகிறது. [4] ஆண்கள், பெண்கள், அனைத்து உயிர்களும், விஷ்ணு மற்றும் உருத்திரன் (சிவன்) போன்ற இந்துக் கடவுள்களும் அவற்றின் சாராம்சத்தில் பிரம்மம் என்ற ஒரே இறுதி யதார்த்தம் என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. [5] [6] "கொத்தடிமை" என்பது தியாகச் சடங்குகள் மற்றும் சுயநலம் எனவும், "கொடூரமான ஆசை, வெறுப்பு மற்றும் பாசாங்குத்தனம்" ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது விரதங்கள் செய்வது "பேய்த்தனம்" என்றும் இது குறிப்பிடுகிறது. [6] [7]

இந்த உரையானது இந்து மதத்தின் அத்வைத வேதாந்தப் பள்ளியுடன் எதிரொலிக்கும் பதில்களை வழங்குகிறது. [8]

வரலாறு

நிரலம்ப உபநிடதத்தின் காலம் தெரியவில்லை. ஆனால் இது முக்திகா உபநிடதத்தைப் போன்ற பிற்கால இடைக்கால உரையாக இருக்கலாம். [9] இந்நூலின் கையெழுத்துப் பிரதிகள் நிரலாம்போபநிடதம் என்ற பெயரிலும் காணப்படுகின்றன. [8] இராமனால், அனுமனுக்கு கூறப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 34வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[10]

உள்ளடக்கம்

நிரலம்ப உபநிடதம் என்பது வேதாந்தச் சொற்களின் ஒரு சொற்களஞ்சியம் ஆகும். [11] ஒரு ஆரம்ப பிரார்த்தனைக்குப் பிறகு, தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்பதோடு, வரிசையான பதில்களுடன் தொடங்குகிறது. [12] கேள்விகள், பிரம்மம் என்றால் என்ன? ஈசுவரன் என்பவர் யார்? ஜீவாத்மா என்பவர் யார்? பிரக்ருதி என்றால் என்ன? என்ற பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. உரையின் பொருளடகத்தில் பரமாத்மா, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், இந்திரன், யமன், சூரியன், சந்திரன், தேவர்கள், அரக்கர்கள், பிசாசர்கள், ஆண்கள், பெண்கள், உயிரினங்கள், பிறப்புகள், நிலையான பொருட்கள், அஞ்ஞானம், சுகம், துக்கம், கர்மா, சொர்க்கம், நரகம், பந்தம், மோட்சம், குரு, சீடன், வித்வான், முதா, அசுரன், தவம், பரமபதம், கிரகம், ஆக்ரக்யம் மற்றும் சந்நியாசம் ஆகியவை அடங்கும். [12] [13]

இதில் பதினாறு வினாக்களுக்கும் ஒரே பதிலைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்வருபவை அனைத்தும் பிரம்மம் (இறுதி உண்மை) என்று அழைக்கப்படும் ஒரே அடையாளம் என்று கூறுகிறது. பிரிவுகள் தவறானவை - பரமாத்மா, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், இந்திரன், யமன், சூரியன், சந்திரன், தேவர்கள், அசுரர்கள், பிசாசுகள், பிராமணர்கள் மற்றும் பிற ஆண்கள், பெண்கள், அனைத்து உயிரினங்களும் நிலையான பொருட்கள்.[5] [6] ஈசுவரன் மற்றும் ஜீவன் ஆகிய இரண்டும் பிரம்மத்தின் வெளிப்பாடு என்று உபநிடதம் விளக்குகிறது, அதே சமயம் பிரகிருதி பிராமணனின் சக்தி என விளக்கப்படுகிறது. [5] [6]

சுகம் (மகிழ்ச்சி) என்பது ஒருவரின் உள்ளார்ந்த பேரின்பத்தை உணர்ந்து, சச்சிதானந்தத்தை அனுபவிக்கும் நிலை என உரை வரையறுக்கிறது. [14] [12] துக்கம் (வலி) இவ்வுலகம், சுயமற்ற நிலை, சுய அறிவின் பற்றாக்குறை ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. [6] [12] சொர்க்கம் என்பது ஆன்மீக உண்மையுடன் தொடர்புடையது, அதே சமயம் நரகம் இவ்வுலக வாழ்வின் மீது ஏக்கம் கொள்வது. [14]

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

உசாத்துணை

  • Aiyar, Narayanasvami (1914). Thirty minor Upanishads. Archive Organization. Retrieved 13 February 2016.
  • Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass Publishers. ISBN 978-81-208-1467-7.
  • Deussen, Paul (2010), The Philosophy of the Upanishads, Oxford University Press (Reprinted by Cosimo), ISBN 978-1-61640-239-6
  • Fellow, M.C.; Row, P. Sreenivas (1884). The Theosophist. Theosophical Publishing House.
  • Hattangadi, Sunder (2000). "निरालम्बोपनिषत् (Niralamba Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). Retrieved 13 February 2016.
  • Kenneth S. Cohen (October 1981). Yoga Journal. Active Interest Media. p. 58.
  • Lyer, B. R. Rajam (30 September 1996). Rambles in Vedanta. Motilal Banarsidass Publisher. ISBN 978-81-208-0912-3.
  • Niketan, Yoga (May 2005). The Scriptural Commentaries of Yogiraj Sri Sri Shyama Charan Lahiri Mahasaya. iUniverse. ISBN 978-0-595-35181-7.
  • Tinoco, Carlos Alberto (1996). Upanishads. IBRASA. ISBN 978-85-348-0040-2.
  • Van Boetzelaer, JM (1997). Sureshvara's Taittiriyopanisadbhasyavartikam. BRILL Academic. ISBN 978-9004016682.
  • Albrecht Friedrich Weber (1885). Indische Studien, herausg. von A. Weber, Volume 17. Leipzig: FA Brockhaus (in German language).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya