நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி
நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி (People's Socialist Party, Nepal) (சுருக்கமாக: PSP-N; நேபாளி: जनता समाजवादी पार्टी, नेपाल), இதனையும் ஜனதா சமாஜ்வாதி கட்சி என்றும் அழைப்பர். நேபாளம் நாட்டின் ஆறாவது பெரிய அரசியல் கட்சி ஆகும்.[1]2022 மாதேஷ் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி மாதேஷ் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.[2] அண்மையில் இக்கட்சியின் தலைவர்களான மகந்தா தாக்கூர், பாபுராம் பட்டாராய், மகேந்திர ராய் யாதவ் மற்றும் ரேஷம் லால் சௌத்திரி ஆகியவர்களால் இக்கட்சி பலவாக பிளவு பெற்றது.[2][3]இக்கட்சியின் தேசிய தலைவர் உபேந்திர யாதவ் ஆவார். 2022 நேபாள பொதுத் தேர்தலில்2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 12 உறுப்பினர்களையும்;நேபாள தேசிய சபையில் 3 உறுப்பினர்களையும்; நேபாள மாநில சட்டமன்றங்களில் 20 உறுப்பினர்களையும்; உள்ளாட்சித் தேர்தல்களில் 30நகராட்சித் தலைவர்களையும்; 1548 நகராட்சி உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia