பிள்ளை லோகாசாரியார்
பிள்ளை லோகாசாரியார் (Pillai Lokacharya) கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் (தமிழில் உலகாசிரியன்) என்றானது. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர்.[1] கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானைமலை கிராமத்தினருகே உள்ள ஜோதிஷ்குடி எனுமிடத்தில் கி பி 1311ல் பரமபதமடைந்தார்.[2] இயற்றிய நூல்கள்இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துகளில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia