இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர், ஸ்ரிதிகா,[4] எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், சிறீரஞ்சனி, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 1 சூலை 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 1036 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
இந்த தொடரின் கதை ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு பாரதி என்ற பெண். சிலரால் தேடப்படுகின்றார். அவர்களிடமிருந்து தப்பித்து தமிழ்நாடு செல்லும் புகையிரத்தித்தில் வருகின்றார். அங்கு தமிழை சந்திக்கின்றார். சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழின் மனைவி போன்று நடிக்க நெருடுகிறது. ஆனால், புகுந்த வீட்டில் இவள் மருமகள் அல்ல என்கிற உண்மையை ஏற்படி தெரியவருகின்றது. இவர்களுக்குள் இருக்கும் மர்ம கதை என்பது தான் என்ன?
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
ஸ்ரிதிகா (414-) - சக்தி (முக அறுவை சிகிச்சைக்கு பிறகு)
இந்த தொடரில் கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த 'திவ்யா ஸ்ரீதர்' என்பவர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7] அத்தியாயம் 414 முதல் பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரிதிகா என்பவர் சக்தி மற்றும் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆர்யான் என்பவர் புவி என்ற கதாபாத்திரத்திலும் நடிகை சிறீரஞ்சனி என்பவர் தமிழ் அரசு மற்றும் புவியின் தாயாக செண்பகம் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒளிபரப்பு நேரம்
இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் 24 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது.26 ஏப்ரல் 2021 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாயங்கள்
21 அக்டோபர் 2019 - 24 ஏப்ரல் 2021
திங்கள் - சனி
14:30
1-372
26 ஏப்ரல் 2021 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
12:00
373-
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.