மணிப்புரியம்
![]() (வெளிர் சிவப்பு நிறம்) மணிப்புரியம் (Manipuri, মণিপুরি) அல்லது மேதி மொழி (Meitei-lon, মৈতৈলোন্, Meitei-lol, মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக (பட்டியல்-8) இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பேசுகின்றனர். 1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது. மொழியின் தன்மைகள்
மணிப்புரிய எண்களின் ஒலிப்பு1 - அம, 2 - அனி, 3 - அகும், 4 - மரி, 5 - மேன்க, 6 - தருக், 7 -தரட், 8 -நிய்பன், 9 - மபன், 10 -ட்டர மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மணிப்புரியம்ப் பதிப்பு
|
Portal di Ensiklopedia Dunia