மல்லர் வம்சம் (Malla Dynasty) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளிப் பகுதிகளை கிபி 1201 முதல் 1769 முடிய ஆட்சி செய்த அரச வம்சமாகும். இவர்களை நேவார் மக்கள் (நேபாள நாட்டவர்) என்றும் அழைப்பர். மல்லர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்
திபெத்திய வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக 17-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் செப்பு நாணயங்களை மல்ல மன்னர்கள் புழக்கத்திற்கு வெளியிட்டனர். 1641 முதல் 1674 முடிய காத்மாண்டு சமவெளியை ஆண்ட பிரதாப மல்ல அரசன் அனுமந்துகோ எனும் புதிய அரண்மனை மற்றும் தங்கள் காவல் தெய்வமான துளஜா அம்மனுக்கு கோயிலை கட்டினார். பதான் நகரத்தில் உயரமான பதான் நகரச் சதுக்கத்தைக் கட்டித் தேர்த் திருவிழாக்களை நடத்தினர்.
மல்ல அரசர்கள் தங்களை விஷ்ணுவின் அம்சமானவர்கள் என்றும்; தெய்வீக அம்சம் பொருந்திய வாழும் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து, குமரி எனப் பெயரிட்டு, தனிக் கோயிலை கட்டி அதில் குடி வைத்த்து தொழுதனர். ஆண்டு விழாவின் போது அந்த தெய்வீகச் சிறுமியிடம் மன்னரும், மன்னர் குடும்பத்தவர்களும், பொது மக்களும் வாழ்த்துப் பெற்றனர்.[3]
Savada, Andrea M., ed. (1991). Nepal: A Country Study. Washington: GPO for the Library of Congress.
Newar, Naresh. (2004). 70 years after. Nepali Times. Issue #178 (09 Jan 2004 - 15 Jan 2004) [1]பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம். Retrieved: 10 Dec, 2011.
Petech, Luciano. (1984). Mediaeval History of Nepal (ca. 750-1480). 2nd ed. Serie orientale, toma 54. Rome: Institutio Italiano per il Medio ed Estremo Oriente.
Regmi, D.R. (1965–66). Medieval Nepal. Calcutta: Firma K.L. Mukhopadhyay.
Jing, Anning. (1994). The Portraits of Khubilai Khan and Chabi by Anige (1245-1306), a Nepali Artist at the Yuan Court. Artibus Asiae, Vol. 54, No. 1/2 (1994), pp. 40–86.