மு. தமிழ்க்குடிமகன்மு. தமிழ்க்குடிமகன் (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் இளையான்குடி தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றினார். இவருடைய இயற்பெயர் பெயர் சாத்தையா. தமிழ் மீதுக் கொண்ட பற்றுக் காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அமைந்த திமுக ஆட்சியில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார் (1996-2001). கல்விபள்ளிக் கல்வி
கல்லூரிக் கல்வி
ஆய்வுக்கல்வி1983இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பணி
குடும்பம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் 15. 9. 1938ஆம் நாள் பிறந்தார் [1].இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும் மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 ஆண்மக்களும் கோப்பெருந்தேவி என்ற பெண்மகவும் உள்ளனர். தமிழ்ப்பணிதிருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் சாத்தையா என்னும் தனது இயற்பெயரை தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். இரா. இளவரசு போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். பெருஞ்சித்திரனார் நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் கைகாட்டி (இதழ்), அறிவு ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் இரா. இளவரசு முதலியரோடு இணைந்து தமிழியக்கம் என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார். அரசியல்
வெளிநாட்டுப் பயணங்கள்இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனீ. பிரான்சு, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். மரணம்22-9-2004ஆம் நாள் மதுரையில் மரணமடைந்தார். எழுதிய நூல்கள்
சான்றடைவு
|
Portal di Ensiklopedia Dunia