மேலச்சொக்கநாதபுரம்
மேலச்சொக்கநாதபுரம் (ஆங்கிலம்:Melachokkanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், போடிநாயக்கனூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழ்நாடு - கேரளா எல்கைக் கோட்டில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக போடி மெட்டு அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக கூவலிங்கம் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 12,836 மக்கள்தொகையும், 28 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை, போடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia