வே. குமாரசுவாமி
வேலுப்பிள்ளை குமாரசுவாமி (Velupillai Kumaraswamy, 31 சூலை 1919 - 10 மார்ச் 1978) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2] வாழ்க்கைச் சுருக்கம்குமாரசுவாமி யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரியில் வழக்கறிஞர் வேலுப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய குமாரசாமி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் துணை அதிபரானார்.[3] பின்னர் துணை உணவுக் கட்டுப்பாட்டதிகாரியாகப் பணியாற்றிய பின்னர்,[3] இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று[3] கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அரசியலில்குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][5] துணை நிதி அமைச்சராகவும், துணை உணவு, விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.[3] 1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.[7] ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.[7] குமாரசுவாமி 1956 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாலர் வி. என். நவரத்தினத்திடம் தோற்றார்.[1][8] பின்னர் மார்ச் 1960,[9] 1970[10] தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.[11] சமூகப் பணிகுமாரசாமியின் முயற்சியினால் சாவகச்சேரியில் நீதிமன்றம் ஒன்று உருவானது.[3] சாவகச்சேரி இந்துக் கல்லூரியை "ஏ" தரமாக உயர்த்தினார்.[3] சாவகச்சேரியில் மகளிர் பாடசாலை ஒன்றை உருவாக்கினார்.[3] கைதடி வயோதிபர் இல்லம் இவரது முயற்சியினால் உருவாக்கப்பட்டது.[3] மறைவுகுமாரசாமி குருநாகலில் உள்ள தனது பண்ணைக்குச் சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 1978 மார்ச் 10 ஆம் நாள் தனது 58-ஆவது அகவையில் காலமானார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia