அன்னபூரணி (2023 திரைப்படம்)
அன்னபூரணி (Annapoorani) என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படமானது ஜீ சுடுடியோசு, நாட் சுடுடியோசு, டிரைடென்ட்டு ஆர்ட்சு ஆகியவற்றின் கீழ் ஜதின் சேத்தி மற்றும் ஆர். இரவீந்திரன் இணைந்து தயாரித்தனர். இப்படத்தில் நயன்தாரா படத்தலைப்பின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். 2023 அக்டோபரில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், நயன்தாராவின் 75 வது படம் என்பதால், நயன்தாரா 75 என்ற தற்காலிக தலைப்புடன் சூலை 2022 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை படப்பிடிப்பு ஏப்ரல் 2023 இல் சென்னையில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் ஒரு கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற பின்னர் மற்றுமொரு கட்ட படப்பிடிப்பு முடிந்து செப்டம்பர் 2023 நடுப்பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டன. இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பும் செய்துள்ளனர். ''அன்னபூரணி'' 2023 திசம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புவளர்ச்சி2022 சூலை 12 அன்று, ஜீ சுடுடியோசு, நாட் எஸ்எஸ் சுடுடியோசு மற்றும் டிரைடென்ட்டு ஆர்ட்சு ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளதாக இத்திரைப்படத்தை அறிவித்தன. இதில் நீலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகிறார். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக நயன்தாரா 75 என்று பெயரிடப்பட்டது. கிருஷ்ணா முன்பு ஷங்கரின் இணை எழுத்தாளராகப் பணியாற்றினார், 2.0 (2018) மற்றும் இந்தியன் 2 போன்ற படங்களுக்கு இணை எழுத்தாளராகப் பணியாற்றினார். சூன் 2022 இல் விக்னேஷ் சிவனுடனான திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம் இது. ஜெய், சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். ராஜா ராணி (2013)க்குப் பிறகு நயன்தாராவுடன் ஜெய் மீண்டும் இணைகிறார். 2023 ஏப்ரல் 8 அன்று, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசையமைப்பாளர் தமன் எஸ், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் ஆகியோர் படக்குழுவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ரேணுகா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் போது, நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பின் போது படத்தின் திரைக்கதையை விவரித்ததாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார். நயன்தாராவை மனதில் வைத்து தான் திரைக்கதை எழுதியதாக கிருஷ்ணா தெரிவித்தார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருப்பதாகவும் அறிவித்தார். அக்டோபர் 25 அன்று, படத்தின் தலைப்பு விளம்பரக் காணொலி மூலம் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்புமுதன்மை படப்பிடிப்பு 9 ஏப்ரல் 2023 அன்று சென்னையில் முதல் படப்பிடிப்பு திட்டமிடல் அட்டவணையுடன் தொடங்கியது. பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் ஆசியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. மூன்று நாட்களில், படப்பிடிப்பு முடிந்தது. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, இரண்டாவது கட்டமாக ஏப்ரல் நடுப்பகுதியில் திருச்சிராப்பள்ளியில் படப்பிடிப்பு தொடங்கியது. செப்டம்பர் 16ஆம் தேதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது . இசைகாட்பாதருக்கு (2022) பிறகு நயன்தாராவுடன் இணைந்து இரண்டாவது முறையாக தமன் எஸ் இசையமைத்துள்ளார்; இத்திரைப்படம் தமனுக்கு கிருஷ்ணாவுடன் முதல் படம் ஆகும்.[3] இப்படத்தின் ஒலி உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.[4] நயன்தாராவின் 39வது பிறந்தநாளில் (நவம்பர் 18, 2023) முதல் சிங்கிள் "உலகை வெல்லப் போகிறாள்" வெளியிடப்பட்டது.[5] வெளியீடுதிரையரங்கம்அனிமல் மற்றும் சாம் பகதூருடன் மோதும் அன்னபூரணி 1 டிசம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia