அல்-துமாமா விளையாட்டரங்கம்
அல்-துமாமா விளையாட்டரங்கம் (Al Thumama Stadium) கத்தார் நாட்டின் அல் துமாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டரங்கமாகும்.[2] 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் பிபா உலகக் கோப்பை போட்டிகள் இங்கும் நடைபெறுகின்றன.[3] கத்தாரில் உலகக்கோப்பை காற்பந்துஅல் துமாமா விளையாட்டரங்கம் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள பிபா உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக கட்டப்பட்ட எட்டு மைதானங்களில் ஒன்றாகும்.[4] அமாத்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் இவ்விளையாட்டரங்கம் அமைந்துள்ளது.[5] கத்தார் நாட்டின் அல் சாபர் பொறியியல் நிறுவனமும் துருக்கியின் டெக்ஃபென் கட்டுமான நிறுவனமும் இணைந்து கூட்டு முயற்சியாகக் கட்டுமானப் பணியில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டன. கட்டிடக்கலை வடிவமைப்பை அரபு பொறியியல் பணியகத்தின் தலைமை கட்டிடக் கலைஞர் இப்ராகிம் செய்தா உருவாக்கினார்.[6][7] மத்திய கிழக்கு முழுவதும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அணியும் பாரம்பரிய தொப்பியான தகியா தொப்பியின் தாக்கம் விளையாட்டரங்க வடிவமைப்பில் இப்ராகிமிற்கு பயன்பட்டது.[8][9][10] அல்-துமாமா விளையாட்டரங்கத்தில் 40000 இருக்கைகள் உள்ளன. 50,000 சதுர மீட்டர் (540,000 சதுர அடி) பரப்பளவுள்ள பொதுப் பூங்கா மைதானத்தைச் சுற்றி அமைந்துள்ளது.[11] உலகக் கோப்பையைத் தொடர்ந்து, மைதானத்தின் பாதி இருக்கைகள் அகற்றப்பட்டு மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[12][13] 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அல்-துமாமா விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.[9][14] அல் துமாமா விளையாட்டரங்கம் உட்பட 2022 பிபா உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்துவதற்காக கட்டபபட திட்டமிடப்பட்ட இதர விளையாட்டு அரங்குகளின் கட்டுமானத்தை பன்னாட்டு மன்னிப்பு அவை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன.[15] 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் கத்தார் அரசாங்கம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களை அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமற்ற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது. அவர்கள் முதலாளியின் அனுமதியின்றி தங்கள் வேலையை மாற்றவோ அல்லது வெளியேறவோ இச்சீர்திருத்தம் அனுமதித்தது. இருப்பினும், முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் மீது சில கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அமைப்பின் பிற கூறுகள் தொடர்ந்து இருந்தன.[16] 2022 உலகக் கோப்பையின் ஓர் ஆளும் குழுவாக பிபா பலநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பொறுப்பேற்றுக் கொண்டது. அதைப் பற்றிய கருத்துகளை கேட்டு எந்தவொரு பாகுபாடும் ஊதிய முரண்பாடுகளும் அற்ற சுழிய சகிப்புத்தன்மை கொள்கையை தன்னுடைய உச்சகுழுவின் மூலம் கவனித்துக் கொண்டது. தொழிலாளர்கள் குறைகளை எழுப்புவதற்கான சாத்தியமான வழிமுறைகள் மற்றும் அவர்கள் தரத்திற்கு ஏற்ப வாழத் தவறினால் அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடைமுறைகளையும் வகுத்தது.[17] வரலாறுஅல்-துமாமா விளையாட்டரங்கத்தின் திறப்பு விழா அக்டோபர் 22, 2021 அன்று எமிர் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடைபெற்றது.[11][18] 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் அல்-துமாமா விளையாட்டரங்கத்திற்கு விளையாட்டு மற்றும் அரங்கங்கள் பிரிவில் நில வர்த்தக நிபுணர்களுக்கான பன்னாட்டு சந்தை அமைப்பின் விருது வழங்கப்பட்டது.[19][20] பிபா அமைப்பின் அரபு கோப்பை 2021 போட்டியின் போது இந்த மைதானம் ஆறு போட்டிகளை நடத்தியது. இதில் புரவலர்களான கத்தார் மற்றும் அல்சீரியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.[21][22] நடைபெற்ற போட்டிகள்2021 பிபா அரபு கோப்பை
2022 பிபா உலகக்கோப்பைஅல் துமாமா விளையாட்டரங்கத்தில் 2022 பிபா உலகக் கோப்பையின் எட்டு போட்டிகளை நடைபெறுகின்றன.[23]
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia