இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 பெப்ரவரி 9 முதல் 14 வரை இந்தியாவில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் பங்குபெற்றுகிறது.[1][2] புனே, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன.[3][4] இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று உலக இ20ப தரவரிசையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.[5]
அணிகள்
முதலாவது ஆடத்தில் திலகரத்ன டில்சான் இற்குப் பதிலாக நிரோசன் டிக்வெல்ல முதலாவது ஆட்டத்தில் விளையாடுகிறார்.[8] பினுர பெர்னாண்டோவிற்குப் பதிலாக சமிந்த எரங்கா விளையாடுகிறார்.[9]
இ20ப தொடர்
1வது இ20ப போட்டி
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி. மகாராட்டிரா கிரிக்கட் வாரிய அரங்கு, புனே நடுவர்கள்: வினீத் குல்கர்ணி (இந்), சி. கே. நந்தன் (இந்) ஆட்ட நாயகன்: கசும் ராஜித்த (இல)
|
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நிரோசன் டிக்வெல்ல, கசும் ராஜித்த தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.[10]
2வது இ20ப போட்டி
இந்தியா 69 ஓட்டங்களால் வெற்றி ஜேஎஸ்சிஏ பட்டாட்டு அரங்கு, ராஞ்சி நடுவர்கள்: அனில் சௌத்திரி (இந்), வினீத் குல்கர்ணி (இந்) ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பன்னாட்டு இ20 போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் மூன்று இலக்குகளைக் கைப்பற்றிய இலங்கை வீரராக திசாரா பெரேரா சாதனை படைத்தார்.[11]
3வது இ20ப போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அசெலா குணரத்தின தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் விளையாடினார்.
- இலங்கையின் 82 ஓட்டங்கள் இ20ப போட்டிகளில் எடுத்த அதிகுறைந்த ஓட்டங்களாகும்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்