இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள்
சில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் "மழவுங் குழவும் இளமைப் பொருள்" எனும் வரியை வைத்து, மழவர்கள் என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த இளம் வீரர்களை குறிக்கும் சொல் என்றும்[5][6] குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்றும் கூறுவர்.
ஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் இலக்கிய மூலச்சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, மழவர் என்பது குடிப்பெயர் எனவும் அவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது எனவும் அறியமுடிகிறது. மழவர்கள் கொல்லிமலைக்குரியவர்கள். கொல்லிக் காவலன் என்று வல்வில்ஓரி குறிப்பிடப்படுகின்றார். மழவர்கள் சங்ககாலத்தில் சிறந்த வீரர்களாக விளங்கியிருக்கின்றனர். உருவக்குதிரை மழவர், கழற்சான் மழவர், பெருந்தோண்மழவர், நெடுவேள்மழவர், வன்கை மழவர், என்று சங்க இலக்கியத்தில் இவர்கள் குறிக்கப்பெறுகின்றனர், இம்மழவர்கள் முல்லையும், குறிஞ்சியும் முறையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுக்குற்ற காலத்தில் பாலைவழி நின்று வழிப் பறிசெய்தும், வேட்டையாடியும் வாழ்ந்தனர் என்று சங்க அகப்பாடல்களால் அறியலாம்.[7]
“கல்லா மழவர் வில்லிடை விளங்கிய துன்னருங் கவலை யருஞ்சுரம்”
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.[9] அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.[10]
தற்கால திருப்பூர் மாவட்டம்தாராபுரம் வட்டம்பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது.[11] கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.[12] மேலும், இந்த மழநாடுதிருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன.[3][13] மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன.[4][14][15][16] கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.[17] சங்க இலக்கியமான புறநானூற்றில்அதியமான் நெடுமான் அஞ்சியைஔவையார்மழவர் பெருமகன்[18] என்றும் தலை நீர் நாடன்[19] என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனானஅதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும்.[20] இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம்திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது.[2] இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது.[21] இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.
மழவர் பெயரில் உள்ள இடங்கள்
வரலாற்று இடப்பெயர்கள்
தற்கால தருமபுரி மாவட்டம்அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[22]
தற்கால தருமபுரி மாவட்டம்அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.[23]
வேலூர் மாவட்டம்வாணியம்பாடி வட்டம்அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.[24]
கி.பி. 8ஆம் நூற்றாண்டு
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.[9]
தற்கால தருமபுரி மாவட்டம்அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[22]
கி.பி. 9ஆம் நூற்றாண்டு
தற்கால தருமபுரி மாவட்டம்அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[26] இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டு
கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும்[27]மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும்[28] கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.
தற்கால கருநாடக மாநிலம்ராமநகரம் மாவட்டம்சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.[29] மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது.[30] இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டு
1067 ஆம் ஆண்டு வீர ராசேந்திரன் ஆட்சியில், திருச்சிராப்பள்ளி பகுதியில் கரூர் பசுபதீச்சரர் கோயிலின் தென்புறச்சுவர் கல்வெட்டுக்களில் வந்துள்ள உடன் கூட்டத்து அதிகாரிகளின் பெயர்களில் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு, ஐயங்கொண்ட சோழ நல்லூருடையான் உதைய திவாகரன் கூத்தாடுவானான வீரராசேந்திர மழவராயர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.[31]
கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
1248 ஆம் ஆண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் கல்வெட்டில் அய்யன் மழவராயார் என்பர் குறிப்பிடப்படுகிறார்.[32]
15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டைமாவட்டம், குளத்தூர் வட்டம், மடத்துக் கோவில் முதல் பிரகாரம் நுழைவு வாயில் தூணில், மழவராயர் ஆசிரியம் வழங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.[33]
15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை மாவட்டம் ,குளத்தூர் வட்டம், குன்றாண்டார் கோவில் கல்வெட்டில் தேவாண்டான் மழவராயர் என்பர் குறிப்பிடப்படுகிறார்.[34]
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.[35]
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.[37] வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும்[18] வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.[38] பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான்.[39] இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.[40] மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர். [41]
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் [42] மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். [43] திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் [44] என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.
சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர்[45] என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர்[46] என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.[47]
மழபுலம்
மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்..
கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி [1]
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.[17]
கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு
கைலாயமாலை
கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.[49]
கி.பி. 15ஆம் நூற்றாண்டு
திருப்புகழ்
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில்காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.[50][51]
↑ 3.03.1மழநாடு - maḻa-nāṭu n. மழவர் +. Regionnorth of the Cauvery on the western side ofTrichinopoly; திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மங்கலமென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல்.சொல். 273, இளம்பூ.). - University of Madras Lexicon
↑ 4.04.1மழகொங்கம் - maḻa-koṅkam, n. < மழவர் +. See மழநாடு. மழகொங்க மடிப்படுத்து (வேள்வி குடிச்சாஸனம்). - University of Madras Lexicon
↑உண் துறை மலை அலர் அணியும் தலை நீர் நாடன் (புறநானூறு 390)
↑கல்வெட்டுச் சொல்லகராதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
↑மழநாட்டுப்பிருகச்சரணம் - maḻanāṭṭu-p-pirukaccaraṇam n. மழநாடு +. A sub-division of Smārta Brahmins; சுமார்த்தப்பிராமணரின் உட்பிரிவுவகை. (E. T. i, 335.) - University of Madras Lexicon
↑ 22.022.1ஸ்ரீ சிரீ புருச பருமற்கு - - - -
தாவது பிருணிதுவியார் புறமலை
நாடாள மழவூர்த் தொருக் கொண்ட ஞா
ன்று செருப்பச் சடையன் பட்டான் - தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1973/18
↑ 23.023.1தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1974/146
↑கோவிசைய சீபரும்மற் கிரு
த்தொன்பதாவது ஆட்டி தி
ங்கள் புணரு பூசது ஞா(ன்)று தகடு
ருப் பிடி மண்ணேரிக் கீழ் உடை
யாரு தண்டத்தோடு இலாட
ரைசரோடும் மழவரைசரோடும்எ
றிந்து பட்டாரு கங்கதி அ
ரைசரு சேவகரு மாதப் பெருதிரை
சரு கன்னாடு - ஆவ. இதழ். 20, 2010, பக். 196
↑பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, பக்கம் : 6,15,17
↑தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1973/14,1973/15