அகில இலங்கை மக்கள் காங்கிரசு
அகில இலங்கை மக்கள் காங்கிரசு (All Ceylon Makkal Congress) என்பது இலங்கையின் இசுலாமிய சமூகத்தைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து 2004 ஆம் ஆண்டில் பிரிந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 2008 ஆம் ஆண்டில் தனிக்கட்சியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இதன் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்பட்டது. 2010 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்சவை இக்கட்சி ஆதரித்தது[1]. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அரசுக் கூட்டணியில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. இக்கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சித் தலைவர் ரிசாத் பதியுத்தீன், உனைசு பாரூக், மட்டக்களப்பில் வெற்றி பெற்ற எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா ஆகியோராவர். இவர்களில் பதியுதீன், இஸ்புல்லா ஆகியோர் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆவர். மேற்கோள்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia