அமோகபாசா கல்வெட்டுஅமோகபாசா கல்வெட்டு (ஆங்கிலம்: Amoghapasa Inscription இந்தோனேசியம்: Prasasti Amoghapasa) என்பது பாடாங் ரோக்கோ கல்வெட்டின் (Padang Roco Inscription) மேல்பகுதியில் உள்ள அமோகபாசா சிலையின் (Pāduka Amoghapāśa; Avalokiteśvara) பின்புறத்தில் எழுத்து வடிவங்களில் உள்ள் கல்வெட்டு ஆகும். 1347-ஆம் ஆண்டில், ஆதித்தியவர்மன், பாடாங் ரோக்கோ கல்வெட்டின் அமோகபாசா சிலையின் பின்புறத்தில் இந்தக் கல்வெட்டைச் சேர்த்தார்[1]:232 அந்தச் சிலை தன்னை சித்தரிப்பதாக ஆதித்தியவர்மன் அறிவித்தார். இன்று இந்தக் கல்வெட்டு, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. பாடாங் ரோக்கோ கல்வெட்டுபாடாங் ரோக்கோ கல்வெட்டு என்பது 1286-ஆம் ஆண்டு, இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, தருமசிராயா மாநிலம், சித்தியூங் மாவட்டம், நாகரி சிகுந்தர், பாடாங் ரோக்கோ, பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[2] இந்தக் கல்வெட்டு, அவலோகிதர் சிலையின் அடித்தளமாக உள்ளது.[3] அமோகபாசா கல்வெட்டின் பின்புறம் (D.198-6469) எனும் குறியீடு செதுக்கப்பட்டுள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia