Dukuh Plumpungan, Kelurahan Kauman Kidul, Kecamatan Sidorejo, Kota Salatiga, Provinsi Jawa Tengah, ஜகார்த்தா
அடையாளம்
PO2014102300172 (பதிவு 23 அக்டோபர் 2014)
பதிவு
சலதீகா நகர கலாசார துறைத் தலைவரின் ஆணை எண். 432/022/417 (சூலை 30, 2019)
பிளம்பூங்கான் கல்வெட்டு அல்லது அம்பாரான் கல்வெட்டு (ஆங்கிலம்: Plumpunga Inscription; இந்தோனேசியம்: Prasasti Plumpunga அல்லது Prasasti Hampran) என்பது இந்தோனேசியா, மத்திய ஜாவா மாநிலம், சிடோரெஜோ மாவட்டம், சலதீகா நகரம், கௌமன் கிடுல் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றைக்கல் (Monolith) செதுக்கல் ஆகும்.[2][3]
தற்போது இந்த ஒற்றைக்கல், சலதீகா நகரத்திலிருந்து பெரிங்கின் கிராமத்தை நோக்கி சுமார் 4 கி.மீ தொலைவில், பிளம்பூங்கான் பூங்கா வளாகத்தில் உள்ளது. இந்தக் கல்வெட்டு சலதீகா நகரத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.[4][5]
எரிமலைப் படிகப்பாறையில் எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டு கிபி 750 சாலிவாகன ஆண்டு 672-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தற்போது ஜகார்த்தா, இந்தோனேசியா சலதீகா நகர கலாசார துறையின் பாதுகாப்பில் உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் PO2014102300172. இந்தக் கல்வெட்டு சமசுகிருதம், பழைய ஜாவானிய மொழி ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.[6][7]
வரலாறு
பிளம்பூங்கான் கல்வெட்டு 1பிளம்பூங்கான் கல்வெட்டு 2சலதீகா அருங்காட்சியகம்
கல்வெட்டின் எழுத்துகள், ஒவ்வொரு மூலையிலும் உள்நோக்கியும் வெளிப்புறமாகவும் நீண்டு செல்லும் இரட்டைக் கோடு கொண்ட செவ்வகக் கட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.[8]
அந்தக் காலக்கட்டத்தில் பெர்டிக்கான்(Perdikan) எனும் வரி இல்லாத நிலங்கள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அரிதான நிகழ்வாகும்; ஏனெனில் அது அரசருக்கு உண்மையாகவே சேவை செய்த கிராமங்களுக்கு மட்டுமே அவ்வாறான தகுதி வழங்கப்பட்டது.[9]
அந்த நிகழ்வு அழியாமல் நினைவுபடுத்தும் வகையில், பானு மன்னர் பிளம்பூங்கான் கல்வெட்டில் எழுதினார்: "அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும்" என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொற்றொடர்(Çrir Astu Swasti Prajabhyah. கி.பி 750 சூலை 24 வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது.[10]
பானு பிரதேசம்
பெர்டிக்கான்(Perdikan) எனும் வரி இல்லாத நிலங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட இராச்சியத்திற்குள் உள்ள ஒரு பகுதி என்று பொருள். அந்தப் பகுதிக்கு சில சிறப்புப் பண்புகள் இருப்பதால், அதற்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும்.[11]
அத்துடன் அந்தப் பகுதிக்கு அனைத்து வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. மன்னர் பானு கொடுத்த பிரதேசம் என்பதால் பானு பிரதேசம் என்று அழைக்கப்பட்டது அந்தப் பிரதேசத்தில் சலதீகா மற்றும் அதன் சுற்றுப்புறங்களும் அடங்கும்.[12]
Miksic, John N (1994-09-01), "Imagine Buddha in Prambanan: Reconsidering the Buddhist Background of the Loro Jonggrang Temple Complex", Journal of Southeast Asian Studies, 25 (2), Cambridge University Press: 442, doi:10.1017/s0022463400013692, ISSN0022-4634 being a review of - Jordaan, Roy E; Rijksuniversiteit te Leiden. Vakgroep Talen en Culturen van Zuidoost-Azië en Oceanië (1993), Imagine Buddha in Prambanan : reconsidering the Buddhist background of the Loro Jonggrang temple complex, Vakgroep Talen en Culturen van Zuidoost-Azie en Oceanie, Rijksuniversiteit te Leiden, ISBN978-90-73084-08-7