இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள்

இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள் அடிப்படையில் மாநிலங்களின் உள்ள முதலலைமச்சர்களின் ஒத்த அதிகாரங்களை கொண்டவர்களாக இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் விளங்குகின்றனர்.

இந்தியாவில் 3 ஆட்சிபகுதிகளில் துணைநிலை ஆளுநர்கள் ஆளுநர்களின் அதிகாரங்களை கொண்டே செயல்படுகின்றனர். அதாவது இந்தியாவின் தலைநகராமான புதுதில்லி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்த ஆட்சிப் பகுதிகளில் துணை நிலை ஆளுநர்களின் ஆளுமையில் இயங்குகின்றன.

புதுதில்லி, புதுச்சேரி ஆட்சிப பகுதிகளில் சுயாட்சித் தன்மையுடைய அரசாக, மாநிலங்களின் முதலைமைச்சர்களின் அதிகாரங்களை கொண்ட ஆட்சிப் பகுதியாக, ச்ட்டப் பேரவைகளை கொண்டனவாக விளங்குகின்றது. இவ்விடங்களில் துணைநிலை ஆளுநர் மாநில ஆளுநருக்குள்ள அதிகாரங்களுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றார்.

ஏனைய 4 ஆட்சிப்பகுதிகளுக்கும் ஆட்சிப் பொறுப்பாளராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் துணைநிலை ஆளுநர்கள்

இந்திய ஆட்சிப்பகுதிகளின் தற்பொழுதய துணைநிலை ஆளுநர்கள்
வ.எண் ஆட்சிப்பகுதிகள் துணைநிலை ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பட்டியல்
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் தேவேந்திர குமார் ஜோஷி 8 அக்டோபர் 2017 அனைத்தும்
2 தில்லி அனில் பைஜால் 31 டிசம்பர் 2016 அனைத்தும்
3 புதுச்சேரி தமிழிசை சௌந்தரராஜன் 16 பிப்ரவரி 2021 அனைத்தும்
4 லடாக் இராதாகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 அனைத்தும்
5 ஜம்மு காஷ்மீர் மனோஜ் சின்ஹா 7 ஆகஸ்டு 2020 அனைத்தும்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya