இரண்டாம் சிவாஜி
வரலாறுஇரண்டாம் சிவாஜி கைக்குழந்தையாக இருக்கையில், 1700-இல் மன்னர் சத்திரபதி இராஜாராம் இறந்து விடவே, இராணி தாராபாய் அரசப் பிரதிநிதியாக, மாரத்தியப் பேரரசை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் சத்திரபதி சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனுமான சாகுஜி 1707ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து சாத்தாராவிற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த இரண்டாம் சிவாஜியையும், அவரது அன்னை இராணி தாரபாயையும் அரியணையிலிருந்து அகற்றி, தான் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [1][2] [2] இந்நிலையில் இராணி தாராபாய், கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கோல்ஹாப்பூர் இராச்சியத்தை நிறுவி இரண்டாம் சிவாஜியை மன்னராக்கினார். இரண்டாம் சிவாஜி கோல்ஹாப்பூர் இராச்சியத்தை 1710 முதல் 1714 முடிய ஆண்டார். இரண்டாம் சிவாஜியின் சிற்றன்னையும், தாராபாயின் சக்களத்தியுமான இராஜேஸ்பாய், இரண்டாம் சிவாஜியை அரியணையிலிருந்து அகற்றி, தமது மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக்கினார். பின்னர் இரண்டாம் சிவாஜி 14 மார்ச் 1726-இல் அம்மை நோய் தாக்கி இறந்தார்.[3] இரண்டாம் சம்பாஜியின் இறப்பிற்குப் பின் இருமாதங்கள் கழித்து, அவரது மனைவிக்கு இரண்டாம் இராஜாராம் எனும் குழந்தை பிறந்தது. சத்தாராவின் சத்திரபதி சாகுஜிக்கு ஆண் குழந்தை இல்லாததால், 1740-இல், இராணி தாராபாயின் பேரனும், இரண்டாம் சிவாஜியின் மகனுமான இரண்டாம் இராஜாராமை தத்து எடுத்து வளர்த்தார். சாகுஜியின் இறப்பிற்குப்பின் இரண்டாம் இராஜாராம் சதாரா அரசின் மன்னரானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia