தோஸ்த் முகமது கான், போபால் இராச்சியத்தின் நிறுவனர் (1672–1728)போபால் இராச்சியத்தின் பக்கத்து இராச்சியங்களான குவாலியர் அரசு மற்றும் இந்தூர் அரசுகளின் வரைபடம்
போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின்மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.
முகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான தோஸ்த் முகமது கான் என்பவர்[4], 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.
இந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார்.
1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.
இந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு
இந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது.
போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்
நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)
நவாப் யர் முகமது கான் (1728–1742)
நவாப் பைசு முகமது கான் (1742–1777)
நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)
நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)
நவாப் வசீர் முகமது கான் (1807–1816)
நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)
குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)
↑S. R. Bakshi; O. P. Ralhan (2007). Madhya Pradesh Through the Ages. Sarup & Sons. p. 360. ISBN978-81-7625-806-7. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
↑John Falconer; James Waterhouse (2009). The Waterhouse albums: central Indian provinces. Mapin. ISBN978-81-89995-30-0.