இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி (Rajsamand Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தை அமல்படுத்தியதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
தற்போது, இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் கீழ் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் (சட்டப் பேரவை) உள்ளன. இவை:[1]
நான்கு சட்டசபைத் தொகுதிகள் - பீம், கும்பல்கர், இராஜ்சமந்த் மற்றும் நாத்வாரா ஆகியவை முன்பு உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்தன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் - மெர்டா மற்றும் தேகானா ஆகியவை முன்பு நாகௌர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தன. பீவார் மற்றும் ஜெய்தரன் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முறையே அஜ்மீர் மற்றும் பாலி மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.