இரும்புலிகுறிச்சி
இரும்புலிக்குறிச்சி (Irumbilikuruchi), தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்.[4] இது கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஆகும். இரும்புலிகுறிச்சி பெயர் காரணம்சோழ மன்னர்களின் ஆட்சியின் போது போர்படைவீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யத்தேவையான இரும்பு இந்த ஊரிலிருந்தே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக அவ்வூரில் இன்றும் அந்த கிணற்றில் இரும்பும் மண்ணும் கலந்த தடயங்கள் உள்ளன. இதனாலேயே இவ்வூர் இரும்புலிகுறிச்சி என்னும் பெயர்பெற்றது. நிறுவனங்களும் அரசு அமைப்புகளும்இங்கு ஒரு காவல் நிலையமும், இரண்டு தொடக்கப் பள்ளிகளும் ஒரு மேல்நிலை பள்ளியும் உள்ளன. கோவில்கள்ஊரை சுற்றி ஏழு கோவில்கள் உள்ளன. இங்கு 112 வருடங்களாக இடைவிடாது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது.[சான்று தேவை] போக்குவரத்துஜெயங்கொண்டம், அரியலூர், பொன்பரப்பி, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஆகிய ஊர்களுக்கு இவ்வூர் வழியாக பேருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள தொடருந்து நிலையம், செந்துறை தொடருந்து நிலையம் ஆகும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia