உத்தராடம் (பஞ்சாங்கம்)உத்தராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 21 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தராடம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்தோராவது நட்சத்திரமாகிய உத்தராடம் 266° 40'க்கும் 280° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தராட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதலாம் பாதம் தனு இராசியிலும் மற்ற மூன்று பாதங்களும் மகர ராசியிலும் அமைந்துள்ளன. பெயரும் அடையாளக் குறியீடும்![]() இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தராட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தராடத்தின் (ζ மற்றும் σ சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. உத்தராடத்தின் சமசுக்கிருதப் பெயரான உத்தர ஆஷாட (Uttara Ashadha) என்பது "பிந்திய வெற்றி" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "யானைத் தந்த"மும் "கட்டில் பலகை"களும் ஆகும். சோதிடத்தில் உத்தராடம்இயல்புகள்இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தராட நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புக்கள் |
Portal di Ensiklopedia Dunia