திருதியை![]() திருதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். திரிதிய எனும் வடமொழிச் சொல் மூன்றாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் மூன்றாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திருதியைத் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் திருதியையைச் சுக்கில பட்சத் திருதியை என்றும், பூரணையை அடுத்த திருதியையைக் கிருட்ண பட்சத் திருதியை என்றும் அழைக்கின்றனர். வானியல் விளக்கம்சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] திருதியைத் திதி மூன்றாவது திதியும் 18 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 24 பாகையில் இருந்து 36 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சத் திருதியைத் திதியும், 204 பாகையிலிருந்து 216 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் திருதியையும் ஆகும். ஆதாரம்
உசாத்துணைகள்
காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia