திதி, பஞ்சாங்கம்
திதி என்பது "பூமியிலிருந்து கவனிக்கப்படும் சந்திரனின் இரண்டு முகங்களின் கால அளவு" ஆகும். இது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான நீளமான கோணம் 12° (பாகை) ஆக அதிகரிக்க எடுக்கும் நேரம். திதிகள் நாளின் வெவ்வேறு நேரங்களில் தொடங்கி தோராயமாக 19 முதல் 26 மணி நேரம் வரை கால அளவில் மாறுபடும். சந்திர மாதத்தின் ஒவ்வொரு நாளும் திதி என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். ஒவ்வொரு திதியும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான 12 பாகை கோணப் பிரிவைக் குறிக்கிறது. திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம்(தேய்பிறை) மற்றும் சுக்கில பட்சம்(வளர்பிறை) ஆகும். முழு சுழற்சி: சந்திரன் பூமியைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையை முடிக்கும்போது, அது 360 பாகை (30 திதி x 12 பாகை) உள்ளடக்கியது. 15 கிருஷ்ண பட்சம் + 15 சுக்கில பட்சம் = 30 பட்சம் = 30 திதி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான நீளமான கோணம் 12° இன், முழு எண் பெருக்கமாக இருக்கும்போது தொடர்புடைய தொடர்ச்சியான சகாப்தங்களுக்கு இடையிலான கால அளவு.
வளர்பிறைத் திதிகள்அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும். அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள். தேய்பிறைத் திதிகள்அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும். இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர். பிறையின் கட்டங்கள் (Phases in Moon)
திதி பற்றிய பொதுவான தவறான கருத்துக்கள்அதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், திதி பற்றிய பல தவறான கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை:
இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது இந்து நாட்காட்டி அமைப்பின் ஆழத்தையும் சிக்கலையும் பாராட்ட உதவுகிறது. இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia