க. பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக 16 பிப்ரவரி 2017ல் பதவியேற்றார்.[1][2][3][4] 17 வருட சொத்துக்குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால் பிப்ரவரி 14, 2017ல் அஇஅதிமுகவின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை,பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்
நிதி, திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம்.
2017 பிப்ரவரி 16 முதல்
மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு, தகவல் தொழில்நுட்பம்
தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம்.
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்.
2017 பிப்ரவரி 16 முதல்
அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பெப்ரவரி 16, 2017 அன்று பொறுப்பேற்றதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அவரது அணிக்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதில் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிமுகவின் பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது, அதன்படி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகத்துக்கு, எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.[5]
ஆகத்து 22, 2017 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.[6]
2019 சனவரி ஏழு அன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாடு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[7]
தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த செ. மு. மணிகண்டன் 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக ஆர். பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.[8]
வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த இரா. துரைக்கண்ணுகொரோனா வைரசு தொற்றால் 2020 அக்டோபர் 21 அன்று இறந்ததையடுத்து அவரது பொறுப்பில் இருந்த வேளாண்மைத் துறை கே. பி. அன்பழகன் வசம் ஒப்படைக்கபட்டது.[9]
அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பெப்ரவரி 16, 2017 அன்று பொறுப்பேற்றதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அவரது அணிக்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதில் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது, அதன்படி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகத்துக்கு, எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.[5]
ஆகத்து 22, 2017 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.[6]
2019 சனவரி ஏழு அன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாடு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[7]
தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த செ. மு. மணிகண்டன் 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக ஆர். பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.[8]
வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த இரா. துரைக்கண்ணுகொரோனா வைரசு தொற்றால் 2020 அக்டோபர் 21 அன்று இறந்ததையடுத்து அவரது பொறுப்பில் இருந்த வேளாண்மைத் துறை கே. பி. அன்பழகன் வசம் ஒப்படைக்கபட்டது.[9]
சாதனைகள்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துப் பணி, ஃபேம் இந்தியா திட்டம், அம்மா ரோந்து வாகனம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தார். 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழனிசாமி அரசு தமிழ்நாடு பள்ளிபாடத்திட்டத்தை சீர்திருத்தும் நோக்கில் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் உயர் மட்டக் குழுவை அதே ஆண்டின் மே மாதத்தில் அமைத்தது.[10]
2018–19 கல்வியாண்டில் தொடங்கி, பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராகும் வகையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை, படிப்படியாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு இணையான தரத்தில் மேம்படுத்தப்பட்டது.[11][12]
15 ஆகஸ்ட் 2018 அன்று, அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வேலைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 2% துணை ஒதுக்கீட்டை பழனிசாமி அரசு அறிவித்தது, பின்னர் அதை 16 அக்டோபர் 2018 அன்று 3% ஆக உயர்த்தியது .[13][14]
2019 ஆம் ஆண்டில் அவர் தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக யாதும் ஊரே திட்டத்தை (புறநானூறு 192ஐ அடிப்படையாகக் கொண்டு) தொடங்கினார்.[15] பயணத்தின் போது அவர் 3 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய முதலீட்டைப் பெற்றார், இது அவரது முன்னோடி ஜெயலலிதா செய்ததை விடவும் அதிகம்.
பிப்ரவரி 2020 இல், பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.[16][17][18]
2020 ஆம் ஆண்டில், பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது.[22] பள்ளி மாணவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அவர் நடவடிக்கை எடுத்தார், அப்போது இருந்த 3,400 இடங்களுக்கு 1,650 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.[23][24]
அக்டோபர் 2020 இல் பொது விவகார மையத்தால் வெளியிடப்பட்ட பொது விவகாரக் குறியீடு-2020 இன் படி, அவரது ஆட்சியின் கீழ், நிலையான வளர்ச்சியின் பின்னணியில் ஒருங்கிணைந்த குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு சிறந்த ஆட்சி செய்யும் மாநிலமாக மதிப்பிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் போது. தொற்றுநோய் காலத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்யாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
அவரது ஆட்சியின் போது, தமிழ்நாடு 2018 முதல் 2021 வரை ஒட்டுமொத்தமாக சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலமாக இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி $290 பில்லியன் அல்லது ரூ. 21.6 லட்சம் கோடியுடன், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.[25][26][27]
2020 ஆம் ஆண்டில், இந்தியா டுடேயின் “மாநிலங்களின் மாநிலங்கள்” ஆய்வில், பொருளாதாரம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, உள்ளடக்கிய மேம்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தொழில்முனைவோர் உட்பட மொத்தம் 12 பிரிவுகளில் 11 பிரிவுகளில் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தூய்மை, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம். தமிழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த அங்கீகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.[27]