எலிசபெத் (விவிலிய நபர்)
எலிசபெத் என்பவர் செக்கரியாவின் மனைவியும் திருமுழுக்கு யோவானின் தாயும் மரியாவின் உறவினருமாவார்.[1] இவர் புதிய ஏற்பாட்டின் லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2] இவர் கருத்தரித்து திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுக்கும் போது மகப்பேறு வயதைக் கடந்திருந்தார்.[3] விவிலியத்தில் எலிசபெத்லூக்கா நற்செய்தி 1ஆம் அதிகாரத்தின் படி, எலிசபெத் "ஆரோனின் மகள்களில்" ஒருவராக இருந்தார். அவரும் அவரது கணவர் செக்கரியாவும் "கடவுளுக்கு முன்பாக நீதிமான்கள், ஆண்டவரின் எல்லாக் கட்டளைகள் மற்றும் நியமங்களின்படி குற்றமற்றவர்கள்" ( 1:5–7 ), ஆனால் மகப்பேறு இல்லாமல் இருந்தனர். இறைவனின் திருக்கோவிலில் இருந்தபோது (1:8–12 ), கபிரியேல் தேவதூதர் செக்கரியாவை சந்தித்தார்:
தனக்கும் தன் மனைவிக்கும் வயதாகிவிட்டதால் தங்களுக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்று செக்கரியா சந்தேகப்பட்டார். தேவதூதர் தன்னை கபிரியேல் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். செக்கரியா நம்பாததால், தன் வார்த்தைகள் நிறைவேறும் வரை அவர் "ஊமையாகவும், பேச முடியாதவராகவும் இருப்பார்" என்று கூறினார். பிறகு தனது கோவில் ஊழியத்தின் நாட்கள் முடிந்ததும், செக்கரியா தனது வீட்டிற்குத் திரும்பினார்.[4]
கபிரியேல் தூதர் கலிலேயாவில் உள்ள நாசரேத்திற்கு அனுப்பப்பட்டார் [ லூக்கா 1:36 ]. அங்கு , யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கன்னிப்பெண்ணான மரியா, தூய ஆவியினால் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்றும் அவர் இயேசு என்று அழைக்கப்படுவார் என்றும் அறிவித்தார். மேலும் மரியாவின் உறவினர் "எலிசபெத்" தனது ஆறாவது மாத கருக்காலத்தைத் தொடங்கியிருப்பதாகவும் மரியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு எலிசபெத்தை சந்திக்க மரியா "யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்குச்" சென்றார்.[5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia