பெத்தானியாவின் இலாசர்
பெத்தானியாவின் இலாசர் அல்லது புனித இலாசர் என்பவர் யோவான் நற்செய்தியின்படி இறந்த நான்கு நாட்களுக்குப்பின்னர் இயேசு கிறித்துவால் உயிர் பெற்றவர் ஆவார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் இயேசு செய்த ஏழு புதுமைகளில் ஒன்றாகும்.[3] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மரபுகளில் இலாசரின் பின்னாட்கள் குறித்த ஒத்த கருத்தில்லை. கடவுளே எனக்கு உதவி[4] எனப்பொருள்படும் இலாசர் என்னும் பெயரானது லூக்கா நற்செய்தியில் செல்வந்தனும் இலாசரசும் உவமையில் மறொருவருக்கும் வழங்கப்படுவது குறிக்கத்தக்கக்து.[5] யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வினாலே இறந்ததாகக்கருதப்படும் உயிரினம் உயிர்பெறும் நிகழ்வை குறிக்க இலாசரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. Lazarus taxon என்னும் சொல் தொல்லுயிர் எச்சப் பதிவுகளில் சில காலத்திற்கு காணாமல் இருந்ததால் அழிந்த இணம் எனக்கருதப்பட்டவை மீண்டும் காணக்கிடைக்கும் நிகழ்வைக்குறிக்கின்றது. அதேபோல Lazarus phenomenon என்னும் சொல் மீளுயிர்ப்புச் சுவாசம் கைவிடப்பட்டப்பின்பு மீண்டும் உயிர்பெற்று இதயம் துடிக்கும் நிகழ்வை குறிக்கப்பயன்படுத்தப்படுகின்றது. கலையில்கிறிஸ்து இலாசரை உயிர்பெறச்செய்த நிகழ்வானது கிறித்தவ சமயக்கலையில் அதிகம் இடம்பெற்றுள்ளது.[6] ரெம்பிரான்ட், வின்சென்ட் வான் கோ முதலிய பல குறிக்கத்தக்க ஓவியர்கள் இதனைத்தீட்டியுள்ளனர்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia