குர்கஞ்ச் முற்றுகை
குர்கஞ்ச் முற்றுகை என்பது கி. பி. 1221ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்ததன் ஒரு பகுதியாக இம்முற்றுகை நடைபெற்றது. இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவால் ஆளப்பட்ட குவாரசமியப் பேரரசின் மீது மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த செங்கிஸ் கான் பலமுனைத் தாக்குதல் நடத்தினார்.[1] புகாரா மற்றும் சமர்கந்து ஆகிய பெரிய நகரங்களைக் கைப்பற்றிய பிறகு, சிறந்த திட்டமிடல் மற்றும் படை நகர்த்தல் ஆகியவற்றின் மூலம் கானின் இராணுவம் எல்லைப் பட்டணமான ஒற்றாரைச் சீக்கிரமே கைப்பற்றியது.[2] செங்கிஸ் தன் மகன்கள் சூச்சி மற்றும் சகத்தாய் தலைமையில் வடமேற்கு திசையில் குவாரசமியப் பேரரசின் முன்னாள் தலைநகரான குர்கஞ்சை நோக்கி முற்றுகையிடுவதற்காக ஒரு சிறப்புப் பணிக்குரிய படைப்பிரிவை அனுப்பினார். ஆமூ தாரியா ஆற்றின் கழிமுகத்தில் சதுப்பு நிலத்தில் இந்த செல்வச் செழிப்புமிக்க நகரம் அமைந்திருந்தது. இதன் காரணமாகத் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியமாக இருந்தது.[3] தலைமை தாங்கிய இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முற்றுகை நடத்துவது என்பது மேலும் கடினமானது.[4] இறுதியாகத் தன் மூன்றாவது மகன் ஒகோடியை இம்முற்றுகைக்குத் தலைமை தாங்கச் செங்கிஸ் கான் அனுப்பினார். இறுதியாக நகரமானது கைப்பற்றப்பட்ட போது நிர்மூலமாக்கப்பட்டது. மனித வரலாற்றில் குருதி தோய்ந்த படு கொலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[5] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia