கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஆறாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி பகுதியில் அமைந்துள்ளது. [1] இது ஒரு மாடக்கோயில் ஆகும்.[2] தல வரலாறுஇக்கோவில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். [3]
மூலவர்இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார்இக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார். மங்களாசாசனம்இத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். [4] குடமுழுக்குஇக்கோயிலின் குடமுழுக்கு 29 ஜனவரி 2016இல் நடைபெற்றது. [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia