ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு![]() ![]() ![]() ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு, இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்த காசி விஸ்வநாதர் கோயிலின் ஆதி சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி நீர்நிலையில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். 1664-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் காசி விஸ்வநாதர் கோயில் 2 செப்டம்பர் 1669 அன்று இடிக்கப்பட்ட இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்ய இந்துக்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர். இந்துக்களின் முக்கியமான கோயில் பகுதியும், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் பள்ளிவாசல் வளாகத்தை கள ஆய்வு செய்யவும், ரேடார் ஆய்வு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வளாகத்தை மீண்டும் இந்து தெய்வங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது. 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் 3 முக்கிய கோரிக்கைளுடன் வாராணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கோரிக்கைகள் பின்வருமாறு:
25 செப்டம்பர் 1998 அன்று, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் எந்த மதத்திற்கு சொந்தமாக இருந்தது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின்படி, அயோத்தியை தவிர, பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் 15 ஆகஸ்டு 1947 அன்று இருந்த நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், சர்ச்சைக்குரிய இடமான ஞான வாபி கிணறு அல்லது பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியாக இருந்ததா என்பதை முதலில் தீர்மானிக்க நடவடிக்கை வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்தது. காசிவிஸ்வநாத் கோயிலுக்கு ஒரு பழங்கால வரலாறு இருப்பதாகவும், அது மக்களின் இந்து மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் நம்பியது. எனவே இந்த சர்ச்சையை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண 2018-ஆம் ஆண்டில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில், காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதி இல்லை என மறுக்கின்றனர். வாரணாசி மாவட்ட நீதிமன்றம சர்சச்சைகுரிய இடத்தில் அகழாய்வு செய்ய தீர்ப்பு வழங்கியது. ஞான வாபி பள்ளிவாசலில் அகழாய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும் தடை உத்தரவை பெற்றது. ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் இந்து தெய்வங்களில் சிற்பங்கள், இந்து கட்டிட அமைப்புகள் இருப்பதை இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தரப்பினர்ஞான வாபி பள்ளிவாசல் அறிவுக் கிணற்று வளாகம் குறிதது வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் மூன்று தரப்பினர் உள்ளனர். முதல் தரப்பு ஜோதிர்லிங்கமாக உள்ள சிவபெருமானின் நண்பராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி, காசி விஸ்வநாதர் சார்பாக வாதிடுகிறார். ஞானவாபி பள்ளிவாசல் தரப்பில் உத்தரப் பிரதேச மாநில சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் அஞ்சுமான் இந்தே ஜாமியா மஸ்ஜித் குழு வாதிடுகிறது. 16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு18 ஆகஸ்டு 2021 அன்று தில்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள்[1] ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் மண்டபத்தில் உள்ள சிருங்கார கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஸ்வநாதர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். மேலும் பள்ளிவாசலில் உள்ள இந்து தெய்வச் சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு 14 மே 2022 அன்று (சனிக்கிழமை) முதல் நாள் கள ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது. வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்தியத் தொல்லியல் துறைக்கு ஏப்ரல் 2021 ஆண்டில் உத்தரவிட்டது. மே 6 மற்றும் 7ம் தேதிகளில் ஞானவாபி பள்ளிவாசலில் வீடியோ மூலம் கள ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இசுலாமியர்கள் களப்பணி செய்வதை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் களப்பணி செய்யப்படவில்லை.[2] ஞானவாபி மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.[3] பின்னர் 2022, மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதும் வீடியோ மூலம் களப்பணி செய்யப்பட்டது. 20 மே 2022 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசல் வழக்கை, வாரணாசி கீழமை நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு பதிலாக வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.[4] 12 செப்டம்பர் 2022 - வாரணாசி மாவட்ட நீதிமன்றம், 5 இந்துப் பெண்கள் தொடுத்த ஞானவாபி பள்ளிவாசல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.[5][6] 14 அக்டோபர் - ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தை ஆய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட பொருள் சிவலிங்கமா அல்லது நீரூற்றா என்பதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[7][8][9] 11 நவம்பர் 2022 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசலுக்கு மே 2022 வரை அளிக்கப்பட்ட பாதுகாப்பு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்தது.[10] ஞானவாபி பள்ளிவாசலில் தொழுகைக்கு முன்பு கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி மூடி முத்திரைப்பட்டதால், பள்ளிவாசல் நிர்வாகம் மாற்று வசதியை ஏற்படுத்தி தர ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு குறித்து 21 ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.[11][12] 12 மே 2023 - அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி பள்ளிவாசலில் சிவலிங்கம் அமைப்பு இருப்பதாக கருதப்படும் அமைப்பை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்து அறிக்கை அனுப்ப இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு உத்தரவிட்டது.[13] [14] 18 மே 2023 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசலில் கிடைத்த சிவலிங்கம் போன்ற பொருளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கை 19 மே 2023 தேதிக்கு ஒத்தி வைத்தது.[15][16] 31 மே 2023- ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் உள்ள சிருங்கார கௌரி உள்ளிட்ட தெய்வத் திருமேனிகளை இந்துக்கள் அன்றாடம் வழிபட அனுமதி கோரிய வழக்கில், முஸ்லிம் தரப்பின் ஆட்சேப மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[17] 24 சூலை 2023 - ஞானவாபி பள்ளிவாசலில் சிவ லிங்க அமைப்பு இருந்த நீர் நிலையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆய்வு செய்துகொண்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாகம் இந்திய உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சூலை 26 வரை ஆய்வை நிறுத்த ஆணையிட்டதுடன், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.[18][19] 3 ஆகஸ்டு 2023 - ஞானவாபி பள்ளிவாசலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து 4 ஆகஸ்டு 2023 முதல் ஆய்வுப் பணி தொடங்கியது. [20] 2 செப்டம்பர் 2023 அன்று ஞானவாபி பள்ளிவாசலில் மேலும் ஆய்வுத் தொடர, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேலும் 8 வாரங்களுக்கு அனுமதி நீட்டிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.[21] 19 டிசம்பர் 2023 அன்று ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் அமைந்த சிருங்கார கௌரி கோவிலை புனரமைக்க அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இசுலாமிய அமைப்புகள் தாக்கல் செய்த 5 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வாரணாசி நீதிமன்றத்தில் இது குறித்த சிவில் வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[22] உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளதாகவும், இந்த கோவிலை வழிபட அனுமதி கோரியும் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. Gyanvapi case: Allahabad High court dismisses 5 petitions which is seeking ‘restoration’ of temple இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து பல சர்ச்சைகள் கிளம்பின. சர்ச்சைகளுக்கு நடுவே ஆய்வு பணிகள் தொடங்கியது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றமும் ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வை தொடங்கியது. இந்த ஆய்வு தொடர்ந்து வந்த நிலையில் நேற்று வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் ரகசியமாக உள்ளது. இந்நிலையில் தான் ஞானவாபி வளாகத்தில் இருப்பதாக கூறப்படும் கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை எதிர்த்து உத்தர பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் மற்றும் அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த 5 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வாரணாசி நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கள ஆய்வுகாசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்த ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள இந்துக்கள் வணங்கும் சிவ லிங்கம், சிருங்கார கௌரி அம்மன், விநாயகர், நந்தி முதலிய சிலைகள் மற்றும் இந்துக் கட்டிட அமைப்புகளை வீடியோ மூலம் கள ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் ஒரு குழுவை அஜய் மிஸ்ரா எனும் வழக்கறிஞரை ஆணையாளராக நியமித்தது. இக்குழுவின் இந்துக்கள், இசுலாமியர்கள் சார்பில் பலர் இருந்தனர். 14, 15 மற்றும் 16 மே 2022 ஆகிய மூன்று நாட்களுக்கு கள ஆய்வு வாரணாசி நீதிமன்றம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 16 மே 2022 அன்று (செவ்வாய்க் கிழமை) அன்று நடைபெற்ற கள ஆய்வின் போது, இசுலாமியர்கள் தொழுகைக்கு முன்னர் உளூ (உடலைச் சுத்தம் செய்தல்) செய்யப் பயன்படும், சிறு செயற்கை குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி பார்க்கும் போது, அதில் பெரிய சிவ லிங்கம் தெரியவந்தது.[23] கள ஆய்வுப் பணியின் போது பார்த்த காட்சிகளை நீதிமன்றத்தில் தவிர வெளியே யாரும் சொல்லக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் அது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என முஸ்லிம் தரப்பினர் நிராகரித்துவிட்டனர். இருப்பினும் அப்பகுதியை அதிகாரிகள் முத்திரையிட்டு, சர்ச்சைகுரிய பகுதியில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைத்தனர்.[24][25] பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், கள ஆய்வு செய்த ஆணையர் அஜய் மிஸ்ரா, நடுநிலையாக இல்லாமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், மேலும் பள்ளிவாசலில் சிவ லிங்கம் இருப்பதை ஊடகங்களுக்கு தெரிவித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியதை முன்னிட்டு, வாராணாசி நீதிமன்றம் களப்பணி ஆணையாளரான அஜய் மிஸ்ராவை அந்த பொறுப்பிலிருந்து நீக்கியது. கள ஆய்வின் அறிக்கையை உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங் 19 மே 2022 அன்றைய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக முத்திரை வைக்கப்பட்ட மசூதியின் ஒரு பகுதியிலுள்ள சிவலிங்கத்தை அளக்கவும், உளூ செய்யும் ஒசுகானாவை சுற்றியுள்ள சுவர்களை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதன் மீது மசூதி நிர்வாகிகளின் பதிலை பெற்ற பின் முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.[26] 4 ஆகஸ்டு 2023 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் 64 தொல்லியல் ஆய்வகத்தினர் நவீன கருவிகளுடன், நிலத்தை தோண்டாது நவீன முறையில அகழ்வாய்வைத் தொடங்கினர்.[27] வழக்கின் வரலாறு
காசி விஸ்வநாதர் கோயில் இடிப்பு மற்றும் மறுசீரமைப்பு வரலாறு
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia