டேனியல் செல்வராஜ்
தானியல் செல்வராசு (டி. செல்வராஜ், சனவரி 14,1938 - திசம்பர் 20 , 2019) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த[1] செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1][2][3] 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர். ஆரம்ப வாழ்க்கை1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். பொதுவுடைமை இயக்க தொடர்புகள்கல்லூரிக்காலத்திலேயே நெல்லையில் தோழர்கள் தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. இரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளான தோழர்களுடன் நட்பு ஏற்பட்டது.இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.அப்போது ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின. சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேரமாகப் பணியாற்றினார் . இலக்கியப் பணிகள்அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.[4][5][6][7][8][9][10][11] படைப்புகள்சிறுகதைகள்200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, "நோன்பு" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிறுகதைகளுள் சில:
புதினங்கள்6 நாவல்கள் எழுதியுள்ளார்
ஓரங்க நாடகம்50 ஓரங்க நாடகம் வாழ்க்கை வரலாறுஇருவரின் வாழ்க்கை வரலாறு, . மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia