திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

திருக்குறள் அமைப்பும் முறையும் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை மு. சண்முகம் பிள்ளை என்பவர் 1972இல் எழுதி வெளியிட்டார்.[1]

நூலின் உள்ளடக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் "திருக்குறள் ஆராய்ச்சி" வரிசையில் நான்காம் வெளியீடாகக் கொணரப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் The Structure and Method of Tirukkural என்னும் ஆங்கிலத் தலைப்பையும் கொண்டுள்ளது.

நூலின் உள்ளுறை கீழ்வருமாறு:

முதற் பகுதி - நூலமைப்பு

1. முப்பால்
2. இயல் பாகுபாடு
3. அதிகாரப் பகுப்பு முறை
- அதிகாரப் பகுப்புச் செய்தவர் ஆசிரியரே
- அதிகாரப் பெயர்கள்
- அதிகாரப் பெயர் அடைவு
- அதிகாரப் பெயர் வகை
4. அதிகாரப் பெயர்விளக்கமும் வைப்புமுறையும்
5. அதிகாரப் பொருளடைவு
6. வள்ளுவர் வழங்கிய பா
7. பாடல் தொகை வகை
8. அதிகாரப் பாடல் அடைவு

இரண்டாம் பகுதி - நுவலும் முறை

1. முன்னோர் மொழி போற்றுதல்
2. உலகின் மேலிட்டு உரைத்தல்
3. முரண்பாட்டால் விளக்கல்
- உடன்பாடு - எதிர்மறை
- கொள்ளத்தக்கன - தள்ளத்தக்கன
- செய்வதும் - செய்யாமையும்
4. விதிக்கும் முறை
5. வினாவிப் பொருள் உணர்த்தல்
6. எண்ணல் பொருள் வரையறை
7. விளைவு கூறி அறிவுறுத்தல்
8. ஒரு நீதிக்கு மற்றொரு நீதி
9. இயைபுடைய பொருள்களை இணைத்து மொழிதல்
10. வள்ளுவர் உரைக்கும் பொருளும் எடுத்துக்காட்டும்
11. சொற்பொருள் ஒப்புமை
- பொருட்குறிப்பு அகராதி

குறிப்பு

  1. மு. சண்முகம் பிள்ளை, திருக்குறள் அமைப்பும் முறையும், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1972, பக்கங்கள்: 447.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya