திருவைகல் வைகல்நாதர் கோயில்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் (Tiruvaikal Vaikalnathar Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி அடுத்து பழியஞ்சியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் 2 கி.மீ தெற்கில் உள்ளது. ( 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில் இது) வைகல் அல்லது வைகல்நாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33ஆவது சிவத்தலமாகும்.[1] அமைவிடம்இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வரலாறுஆரம்பகால சோழ மன்னர் கோச்செங்கண்ணனால் கட்டப்பட்ட மூன்று முக்கிய கோயில்களில் திருவைகல் வைகல்நாதர் திருக்கோயிலலும் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது.[2] இக்கோயில் பற்றிய குறிப்புகள் தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவற்றில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். இறைவன் சிவபெருமான் செண்பகா ஆரண்யேசுவரரின் வடிவத்தில் காட்சியளிக்கிறார். இவரது துணைவியாக கொம்பியல் கோதை எனப்படும் சாகா கோமளவள்ளி வீற்றிருக்கிறார். அமைப்புமூலவர், அம்மன் விமானம் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இறைவன், இறைவிஇத்தலத்து இறைவன் வைகல்நாதர், இறைவி வைகலாம்பிகை. வழிபட்டோர்பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). லட்சுமி தேவியார் வழிபட்ட தலம். பிற கோயில்கள்இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன. இவற்றையும் பார்க்க
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia