திலகம் (1960 திரைப்படம்)
திலகம் ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கத்தில் 1960-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரேம் நசீர், எம். என். ராஜம், ஸ்ரீரஞ்சனி முக்கிய பாத்திரங்களேற்று நடித்தனர்.[1] திரைக்கதைசரஸ்வதி கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவளும் அவளது மகள் திலகமும் திருச்சியில் வாழும் சரஸ்வதியின் சகோதரி வீட்டிற்கு வந்து தங்குகின்றனர். திலகத்தைத் தன் தம்பி சேகருக்கு மணமுடிக்க சரஸ்வதி விரும்புகிறாள். ஆனால் அவளது சித்தப்பா சாம்பசிவம் திலகத்தை பம்பாயிலுள்ள ஒரு பணக்கார கிழவருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். சாம்பசிவத்தின் மகன் குணசேகரன் தந்தையின் திட்டத்தை எதிர்ப்பதுடன் திலகத்தை சேகருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கிறான். அவனது நடவடிக்கைகளை விளக்குவதே மீதிக் கதையாகும்.[2] நடிகர்கள்பிரேம் நசீர் தயாரிப்பு விபரம்ஏவிஎம் அதிபர் அவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் மகன் எம். சரவணன் இந்தப் படத்தில் தான் தயாரிப்பாளராக உருவானார்.[2] பாடல்கள்திலகம் படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை யாத்தவர்கள்: கொத்தமங்கலம் சுப்பு, எம். கே. ஆத்மநாதன், கவி எஸ். ராஜகோபால், வி. சீதாராமன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எஸ். பகவதி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia