குலதெய்வம் ராஜகோபால்
குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்படும் வீ. ஆர். ராஜகோபால் (ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கதாநாயகனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும், பின்னர், நகைச்சுவை, வில்லன், மற்றும் குணசித்திர வேடங்களிலும் நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நாடகம், வில்லுப்பாட்டு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி "சின்னக் கலைவாணர்" என அழைக்கப்பட்டார்.[1] வாழ்க்கைக் குறிப்புஇவர் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அருகே உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊரில் பிறந்தார். கோவில் கிராமீய பாகவதர், கட்டிட மேஸ்திரி, வீராச்சாமி நாயுடு - தெய்வானை அம்மாள் ஆகியோருக்கு 22-04-1931.இல் பிறந்தார். இவரது ஒரே தம்பி ,வீ. ஆர். நடராஜன் ஆவார். மேடை கதா காலேட்சப பாகவதர் ஜெகன்நாதன் - கண்ணம்மா ஆகியோரின் மகள் கோகிலாம்பாள் என்ற கோகிலாம்பிகையை மணந்தார். இவர்களுக்கு நான்கு புதல்வர்கள்: சௌந்தரபாண்டியன், ஸ்ரீகாந்தன், சம்பத்குமார், செல்வமணி. இவர்களில் கடைசி இருவர், சம்பத்செல்வம் என்ற பெயரில், இசையமைப்பாளர்களாக, பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்கள். சிறு வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்ட ராஜகோபால் பாவைக்கூத்து, நையாண்டி மேளம், ஒத்து நாயனம் ,நடனம் ஆட்டம் பாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கட்டக்கால் ஆட்டம், ஊசி நடனம், பாசி நடனம், பபூஃன் நகைச்சுவை ,ஆகியவற்றைக் கற்று தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 12-வது வயதில் பள்ளத்தூர் வைரம் அருணாச்சலம் செட்டியாரின் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் மதுரையில் அன்று பிரபலமாக இருந்த கலைமணி நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். பின்னர்...கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். 1956.க்குப் பிறகு, குலதெய்வம் படத்தில் கதாநாயகனாக நடித்ததின் வெற்றிக்குப் பிறகு, சொந்தமாக குலதெய்வம் நாடக மன்றம் அமைத்து, வளம் பெற்ற வாழ்வு, கலியுகக் கண்ணன், நீதியின் வெற்றி, நால்வர், நண்பன், புத்திசாலி, ஹலோ மை டார்லிங், போன்ற பல நாடகங்களை, சொந்தமாக நடத்திப் பெரும் புகழ் பெற்றார்.[1] திரைப்படங்களில்1954 ஆம் ஆண்டில் வெளிவந்த நல்லகாலம் திரைப்படம், ராஜகோபால் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். தொடர்ந்து எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கி நடித்த புது வாழ்வு திரைப்படத்தில் நடித்தார். பிறகு, எம். கே. ராதாவுடன் "குடும்பவிளக்கு" திரைப்படத்தில் நடித்தார்.[1] 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏவிஎம்மின் குலதெய்வம் திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் இவரின் சிறப்பு நடிப்புக்காக "குலதெய்வம்" என்ற பெயரும் இவரது பெயருடன் சேர்ந்து, பெருமை பெற்றது. அன்றில் இருந்து இவர் "குலதெய்வம் ராஜகோபால்" என அழைக்கப்பட்டார்.[2] நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவர், டி. ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக நடிக்க வைத்து, கலைமகள் பிக்சர்ஸ் சார்பாக, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ,ஆகிய இரண்டு திரைப்படங்களை, கே. வி. மகாதேவன் இசையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளில், லட்சக் கணக்கில் பெரும்பணம் முதலீடு செய்து, கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார். பின்பு, வில்லுப்பாட்டுக்கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் வரலாறு, காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். பின்னர் விசுவுடன் புயல் கடந்த பூமி, வீடு மனைவி மக்கள் ,வாய்ச்சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி ஆகிய திரைப்படங்களிலும், டி. ராஜேந்தரின் எங்க வீட்டு வேலன், கே. பாக்கியராஜின் எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ தாவணிக் கனவுகள் , ஆகிய படங்களில் நடித்தார். நடித்த திரைப்படங்களின் பட்டியல்குலதெய்வம் ராஜகோபால் நடித்த திரைப்படங்களின் பட்டியல் (அகர வரிசையில்):
வில்லுப்பாட்டுக் கலைஞராக1977-இல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக, "கலைமாமணி" பட்டம் பெற்று, ராஜகோபால் சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் புகழ் பெற்றிருந்தார். "ஐயப்பன் சரித்திரம்," "ஆறுபடைவீடு முருகன் பெருமை," "காவல்தெய்வம் ஐயனார் கதை, "காவல்தெய்வம் முனீஸ்வரன் கதை," காவல் தெய்வம் அகோர வீரபத்திரர் கதை, காவல்தெய்வம் கருப்புச்சாமி கதை, அமாவாசை மயானக்கொள்ளை சுடுகாட்டு சிவலிங்கம் கதை, நல்லதங்காள் கதை, ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை, போன்ற பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றினார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் வில்லுப்பாட்டாகத் தயாரித்து வழங்கினார். இதன் சிறப்பாக, டி. ஏ. மதுரம் இவருக்கு, "சின்னக் கலைவாணர்" என்ற பட்டத்தை, 1960.இல், வழங்கினார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia