துங்கு முதலாம் அமைச்சரவை
துங்கு முதலாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் முதலாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Persekutuan Tanah Melayu 1955; ஆங்கிலம்: First Rahman Cabinet; சீனம்: 第一次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் முதலாவது அமைச்சரவை ஆகும்.[1] மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, இந்த முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். மலேசிய ஆட்சியாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் டொனால்டு மெக்லவரி அவர்களால் அந்தப் புதிய அமைச்சரவை; 4 ஆகஸ்டு 1955 அன்று கார்கோசா செரி நெகாராவில் இருந்து அறிவிக்கப்பட்டது. அமைச்சரவை உறுப்பினர்கள் 9 ஆகஸ்டு 1955 அன்று பதவியேற்றனர். இது மலேசியாவில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவை ஆகும்.[2] பொதுஇந்த அமைச்சரவையின் பதவிப் பிரமாணத்தில்; முதன்முறையாக பெரும்பான்மையான மலாயா மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களே பதவி ஏற்றனர். அத்துடன் இந்த அமைச்சரவைதான், பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் பதவி வகித்த கடைசி அமைச்சரவையும் ஆகும்.[3] மலாயா அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலாயா நிதிச் செயலாளர், மலாயா சட்டத்துறை அமைச்சர் மற்றும் மலாயா வெளியுறவு அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சர்கள் மட்டுமே மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர். அந்தப் பதவிகளை பிரித்தானிய அதிகாரிகள் வழிநடத்தினர். 1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது. மலாயா கூட்டமைப்பின் முதலாம் அமைச்சரவை![]() முதல் நடுவண் அமைச்சரவைமலாயாவின் முதல் நடுவண் அமைச்சரவை 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்டது; பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[4][5] 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்ட அமைச்சரவை
1957-இல் அமைக்கப்பட்ட அமைச்சரவை1957-ஆம் ஆண்டில் மலேசியா விடுதலை அடைந்தது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia