நைசின் விசுவாச அறிக்கை![]() நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), அல்லது நிசேயா நம்பிக்கை அறிக்கை என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் ஏற்படலாயிற்று[1]. நிசேயா நகர்நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் கிறித்தவக் கொள்கைத் தொகுப்பை வடிவமைத்த பொதுச்சங்கம் கூடிய நகரம் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள "இஸ்னிக்" (İznik) என்னும் இடமாகும். இது அந்நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக்காலத்தில் நிசேயா நகரம் கிரேக்க கலாச்சாரத்துக்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருந்தது. கிரேக்க மொழியில் அந்நகரம் "நிக்காயா" (Νίκαια) என்று அழைக்கப்பட்டது. அதுவே இலத்தீன் வடிவத்தில் "நிசேயா" (Nicaea) என்றாயிற்று. நிசேயா நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (Oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், அசீரிய சபை, லூதரன், மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திருப்பலியின் போது இந்த நம்பிக்கைத் தொகுப்பு அறிக்கையிடப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாளம்,விசுவாசத்தின் மறைபொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது. வரலாறுகிறித்தவ சமயத்தில் "நம்பிக்கை அறிக்கை" அல்லது "விசுவாச அறிக்கை" (இலத்தீன்: Credo; ஆங்கிலம்: Creed) எனப்படுவது அச்சமயம் உண்மை எனக் கருதுகின்ற கொள்கைகளை நிர்ணயிக்கும் அளவீடு (yardstick) ஆகும். வரலாற்றில் கிறித்தவ சமயக் கொள்கைகளை யாராவது மறுத்தால் அவ்வமயம் உண்மைக் கொள்கையை எடுத்துக்கூறும் விதத்தில் "நம்பிக்கை அறிக்கைகள்" வெளியிடப்பட்டன. இத்தகைய நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் "சிம்பொலோன்" (σύμβολον = symbolon; இலத்தீன்: symbolum; ஆங்கிலம்: symbol) என்பதாகும். இச்சொல்லின் மூலப்பொருள் "உடைந்த பொருளின் அரைப்பகுதி" என்பது. அப்பகுதியை எஞ்சிய பகுதியின் அருகே வைத்துப் பார்க்கும்போது உடைந்த பொருளின் "தான்மை" (identity) தெளிவாக வெளிப்படும். இந்த மூலப்பொருளின் அடிப்படையில் "symbolon" என்னும் கிரேக்கச் சொல் கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை அடையாளம் காட்டும் அளவுகோல் என்னும் பொருள் பெறலாயிற்று. தமிழில் "விசுவாசப் பிரமாணம்" என்றும் "விசுவாச அறிக்கை", "நம்பிக்கை அறிக்கை" என்றும் இது வழங்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கை அறிக்கைகளுள் மிகப் பழமையான ஒன்று நிசேயா நம்பிக்கை அறிக்கை ஆகும். நிசேயா நம்பிக்கை அறிக்கை: கி.பி.325காண்ஸ்டண்டைன் மன்னர் நிசேயா நகரில் கி.பி. 325இல் கூட்டிய பொதுச்சங்கம் (முதலாம் நிசேயா பொதுச்சங்கம்) கிறித்தவ சமயத்தின் கொள்கைத் தொகுப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தில் கிறித்தவ திருச்சபையின் எல்லா ஆயர்களும் (மரபுப்படி 318 ஆயர்கள்) கலந்துகொண்டார்கள். ஆரியுஸ் என்னும் கிறித்தவப் போதகர் "இயேசு கிறிஸ்து கடவுள் தன்மை கொண்டிருந்தாலும் கடவுளால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்டவரே" என்று கூறியதால் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஆரியுசின் கொள்கை தவறு என்று கண்டனம் செய்யப்பட்டது[2]. அக்கொள்கையை மறுத்து, "இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுள் தன்மை கொண்டவர்" என்றும் "படைப்புக்கு முன்னரே எக்காலத்திலும் கடவுளோடு கடவுளாக இருக்கின்றார்" என்றும் நிசேயா நம்பிக்கை அறிக்கை வரையறுத்தது. கி.பி. 381இல் விரிவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கைநிசேயா பொதுச்சங்கத்திற்குப் பின் கி.பி. 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கம் நீசேயா நம்பிக்கை அறிக்கையைச் சற்றே விரிவாக்கியது[3]. இவ்வாறு விரிவாக்கப்பட்ட அறிக்கை கீழை மரபுவழி திருச்சபையால் ஏற்கப்பட்ட பாடம் ஆயிற்று. "நம்புகிறோம்" (We believe)என்றிருந்த பன்மை வடிவம் மட்டும் மாற்றப்பட்டு "நம்புகிறேன்" (I believe) என்னும் ஒருமை வடிவம் பெற்றது. எபேசு நகரில் கி.பி. 431இல் கூடிய பொதுச்சங்கத்தில்[4] 381 ஆண்டின் நம்பிக்கை அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் நம்பிக்கை அறிக்கையில் இனி மாற்றம் செய்யலாகாது எனவும் முடிவாயிற்று. ஆனால் இத்தகைய முடிவு அறுதியானதன்று என சிலர் கருதுகின்றனர். 325 மற்றும் 381 நம்பிக்கை அறிக்கைகளிடையான வேறுபாடுகள்
தூய ஆவியின் புறப்பாடு பற்றிய கருத்து வேறுபாடுகி.பி. 381இல் வடிவமைக்கப்பட்ட "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இலத்தீன் வழிபாட்டு முறை சார்ந்த திருச்சபைகளால் சிறிது மாற்றப்பட்டது. அதாவது "தூய ஆவி தந்தையிடமிருந்து புறப்படுகிறார்" என்னும் பாடம் "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று மாற்றப்பட்டது. இம்மாற்றம் கிறித்தவ திருச்சபை வரலாற்றில் "Filioque controversy" (மகன் குழப்பம்) என்று அழைக்கப்படுகிறது[5]. "Filioque" என்னும் இலத்தீன் சொல் "மகனிடமிருந்தும்" (and [from] the Son) எனப்பொருள்படும். தந்தைக் கடவுளே அனைத்திற்கும் ஊற்றாவார் என்றும் அவரோடு இணையான விதத்தில் கடவுள் தன்மை கொண்டு, தெய்வீக ஆள்களாக விளங்குகின்ற மகனும் (இயேசு கிறிஸ்து) தூய ஆவியும் காலங்களுக்கு முன்னரே அவரிடமிருந்து "புறப்படுகின்றனர்" (proceed) என்றும் "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" எடுத்துக் கூறியிருந்தது. இதைச் சற்றே விரித்து "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று இலத்தீன் வழிபாட்டு சபைகள் விளக்கம் தந்தன. அத்தகைய விளக்கம் சரியல்ல என்று கீழை மரபுவழித் திருச்சபை கருதியது. இதனால் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது ஒரு பெரிய பிளவுக்கு வழிகோலியது. நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை (கி.பி. 381): முழு வடிவம்இந்த நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையால் இன்று ஞாயிறு மற்றும் பெருவிழாக்களில் கொண்டாடப்படும் திருப்பலியில் அறிக்கையிடப்படுகிறது. "உரோமைத் திருப்பலிப் புத்தகம்" (Roman Missal) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க வழிபாட்டு நூலில் காணப்படுகின்ற பாடம் இதோ:
அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கைகத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வழிபாட்டின்போது அறிக்கையிடப்படுகின்ற மற்றொரு அறிக்கை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை" அல்லது "அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை" (Apostles' Creed) என்று அழைக்கப்படுகிறது. திருப்பலி தவிர, செபமாலை, சிலுவைப்பாதை, திருமுழுக்கு வழங்குதல் போன்ற வழிபாடுகளிலும் இந்த அறிக்கை உரைக்கப்படுகிறது. "திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ: அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை: பழைய தமிழ்ப் பெயர்ப்பு
திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்புமேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:
எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.
இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.
தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.
ஆதாரங்கள்உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia