புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1937ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ஞான சமுத்திரம் என்னும் நூலில் இருந்து இப்பாடலில் உரை கீழே தரப்பட்டுள்ளது
இரட்சகருடைய பரிசுத்த மாதாவே! ஏகும் வழியான பரகதி வாசலே, சமுத்திரத்தின் தாரகையே, பாவத்தில் வீழ்தவர் எழுந்திருக்கப் பரிதவிக்கையில் உமது வேண்டுதலால் உதவியருளும். உலகத்தியல்பு அதிசயிக்க உம்மைப்படத்தவரைப் பெற்ற தாயே, பெறுமுன்னும் பெற்றபின்னும் கன்னிகையே, தேவ தூதருடையமங்கள வாய் மொழிக்கேட்டுப்பாவிகள் பேரில் இரக்கமாயிரும்.
திருவருகைக் கால முதல் ஞாயிறு துவங்கி கிறிஸ்து பிறப்பு முடிய :
முதல் - ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
துணை - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்.
மன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.