பகாட் கஞ்சு
பகாட்கஞ்சு (பகார்கஞ்ச், இந்தி: पहाड़गंज, உருது: پہاڑ گنج, Punjabi: ਪਹਾੜਗਂਜ, பொருள்: மலைப் பகுதி) என்னும் பகுதி, மத்திய தில்லியில் உள்ளது. இந்த பகுதியின் கிழக்கில் புது தில்லி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசின் காலத்தில் இந்தப் பகுதி ஷாகஞ்சு என்று அழைக்கப்பட்டது.[1] இதுவும் கரோல் பாகும், தர்யா கஞ்சும் மத்திய தில்லியின் மூன்று ஆட்சிப் பிரிவுகள். இங்கு உணவகங்களும், விடுதிகளும் அதிகமுள்ள காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் விரும்புமிடமாக உள்ளது. பல்வேறு நாட்டு உணவுமுறைகளில் சமைக்கப்படும் உணவுகளும் இங்கு விற்கப்படுகின்றன.[2][3] ஆட்சியும் அரசும்இந்த பகுதி சதர் பசார் - பகாட்கஞ்ச் என்ற பெயரில், தில்லி மாநகராட்சியின் 12 ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[4] 2008ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5] சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia