பசி நாராயணன்
நாராயணன், (பசி நாராயணன்) என்பவர் இந்திய மேடை நாடக, திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக கவுண்டமணியுடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். நாராயணன் 500 க்கும் மேற்பட்ட தமிழ் மொழிப் படங்களில் நடித்தார். இவர் கவுண்டமணியிடம் "போன் ஒயரு பிஞ்சி ஒரு வருசம் ஆச்சி..." என்ற வசனத்திற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.[1] ஆரம்ப கால வாழ்க்கைநாராயணன் தமிழ்நாட்டின் சிவகாசி மாவட்டத்தில் பிறந்தார். இவர் 15 வயதில் நடிக்கத் தொடங்கினார்.[2][3] தொழில்பின்னர் 1955 ஆம் ஆண்டில் மனோகர் நிறுவனத்தில் பல நாடகங்களில் நடித்தார். இதன் பிறகு திரைப்படத் துறையில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் 1960 களில் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார். என்றாலும் பசி படத்தில் நடித்தபிறகே பிரபலமானார். இதன் பிறகு இவர் 'பசி' நாராயணன் என்ற பெயரில் திரை உலகில் புகழ் பெற்றார். நடிப்பு மட்டுமல்லாமல், கதை சொல்லல், எழுதுதல், நடனம் போன்றவற்றிலும் திறமை கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த பிரபல தமிழ்த் திரைப்படமான ' ஆயிரதில் ஓருவன் ' படத்தில் நடித்துள்ளார். அடுத்தத் தலைமுறை முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாண்டியராஜன், கார்த்திக், சரத்குமார் போன்றோரின் பல படங்களிலும் பசி நாராயணன் நடித்துள்ளார். குடும்பம்இவரது மனைவி பெயர் வள்ளி, இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மகனின் பெயர் மாரியப்பன், இரண்டாவது மகளின் பெயர் ரேவதி, மூன்றாவது மகளின் பெயர் கானா ஜோதி.[2] இறப்பு1998 இல், இவர் இதய செயலிழப்பால் இறந்தார். அவரது கடைசி படம் நினைத்தேன் வந்தாய்.[2] திரைப்படப் பங்களிப்புகள்1960 கள்
1970 கள்
1980 கள்
1990 கள்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia