பாரதிய பழங்குடியினர் கட்சி
பாரதிய பழங்குடியினர் கட்சி (Bharatiya Tribal Party) என்பது இந்தியாவின் குசராத்தை தளமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியானது 2017ஆம் ஆண்டு ஜகாடியா சட்டமன்ற உறுப்பினர் சோட்டுபாய் வாசவா மற்றும் மகேசுபாய் வாசவா (ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்) ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.[3] இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியது.[4][5][6] வரலாறுகுசராத்து20172017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய பழங்குடியினர் கட்சி ஜகாடியா சட்டமன்றத் தொகுதி மற்றும் தெடியாபாடா சட்டமன்றத் தொகுதி என் 2 இடங்களில் வெற்றி பெற்றது. 20222022 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியது. ஆனால் ஏப்ரல் 2022-ல், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது.[7][8] ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2022-ல் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை முடித்துக்கொண்டது. ராஜஸ்தான்2018 ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய பழங்குடியினர் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட்டு அந்த இரண்டு இடங்களையும் வென்றது.[9] இக்கட்சி இந்தியத் தேசிய காங்கிரசு அரசாங்கத்தில் இணைந்தது. ஆனால் 2020-ல் இதன் ஆதரவைத் திரும்பப் பெற்றது.[10] மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia