பிரதீப் குமார் (அரசியல்வாதி)
பிரதீப் குமார் (Pradeep Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், உத்தரபிரதேசத்தின் 13, 16, 17 வது சட்டமன்ற உறுப்பினருமாவார். 2017ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். கைரானா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சொந்த வாழ்க்கைபிரதீப் குமார் 1969 மார்ச் 10 அன்று கன்வார்பால் சிங் என்பவருக்கு உத்தரபிரதேசத்தின் கங்கோஹ் தொகுதியின் துத்லா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜர் குடும்பத்தில் பிறந்தார். இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சுனிதா என்பவரை பிப்ரவரி 19, 1999 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தொழிலால் விவசாயியாவார்.[2] அரசியல் வாழ்க்கைஇவர், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினாராக இருந்துள்ளார். முதல் முறையாக, 2000ஆம் ஆண்டில் நகுத் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2012இல் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரபிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் இருதர் சென் என்பவரை 4,023 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2017ஆம் ஆண்டில் மீண்டும் கங்கோஹ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரபிரதேசத்தின் பதினேழாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் நௌமன் மசூத்தை 38,028 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1] இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia