மாநிலங்களவைத் தேர்தல்கள் 1952
தேர்தல்கள்![]() சுதந்திர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1952-ல் தேர்தல் நடைபெற்றது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் முதல் தலைவராகவும், நாட்டின் முதல் துணைக் குடியரதுத் தலைவராகவும் இருந்தார்.[2] தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்மாநிலங்களவை உறுப்பினர்கள் 1952-ல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவை முதன்முதலில் ஏப்ரல் 3, 1952-ல் உருவாக்கப்பட்டது. இது 216 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்கள் குழு (உறுப்பினர்களின் பதவிக்காலம்) ஆணை, 1952 என அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆணைப்படி, சில உறுப்பினர்களின் பதவிக் காலத்தைக் குறைப்பதற்கான ஆணை, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் ஒவ்வொரு இரண்டாம் ஆண்டிலும் ஓய்வு பெறும். ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 1958 அன்று முடிவடைகிறது; 2 ஏப்ரல் 1956 மற்றும் 2 ஏப்ரல் 1954 மற்றும் அதன்படி உறுப்பினர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது பிரிவில் வைக்கப்படுவார்கள்.[3][4] 1952-54 வரையிலான உறுப்பினர்கள்பின்வரும் உறுப்பினர்கள் 1954-ல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் 1952-54 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். சில உறுப்பினர்கள் 1954-ல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகினர் அல்லது மரணமடைந்தனர். இதனால் ஏற்பட்ட காலியிடத்தினை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
1952-56 வரையிலான உறுப்பினர்கள்பின்வரும் உறுப்பினர்கள் 1956 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் 1952-56 காலத்திற்கான உறுப்பினர்களாக உள்ளனர். சில உறுப்பினர்கள் 1956-ல் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகல் அல்லது மரணம் ஏற்பட்டால் காலத்தை முடிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
1952-58 வரையிலான உறுப்பினர்கள்பின்வரும் உறுப்பினர்கள் 1958-ல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் 1952-58 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். 1958-ல் பதவி முடிவடைவதற்கு முன்னர் சில உறுப்பினர்கள் பதவி விலகல் அல்லது மரணம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட காலத்தை முடிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இடைத்தேர்தல்1952ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia