யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி (/ˌjɒɡjəˈkɑːrtə/ or /ˌjoʊɡjəˈkɑːrtə/;[5] Indonesian: Daerah Istimewa Yogyakarta, or DIY) இந்தோனேசியாவிலுள்ள சிறப்புநிலை தன்னாட்சி மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோகியாக்கார்த்தா நகரம். தனி நிருவாகப் பகுதியானாலும் இது வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. சாவக இந்துப் புராணங்களிலுள்ள அயோத்தி நகரின் பெயரால் இது யோகியாக்கார்த்தா என வழங்கப்படுகின்றது. வரலாறுஇந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்கு யோகியாக்கார்த்தா சுல்தானகம் இன்றியமையாத ஆதரவளித்தது. ஜகார்த்தா ஒல்லாந்துக்காரர்கள் வசமானதால் 1946 சனவரி முதல் திசம்பர் 1948 வரை இந்தோனேசியக் குடியரசின் தலைநகராக இருந்தது. யோகியாக்கார்த்தாவின் ஆதரவுக்குப் பலனாக 1950 இல் யோகியாக்கார்த்தாவை சிறப்பு நிர்வாகப் பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தோனேசியாவில் குடியேற்றவாதத்துக்கு முந்திய முடியாட்சியைக் கொண்டுள்ள ஒரே பகுதியாக யோகியாக்கார்த்தா ஆனது. பரம்பரை ஆளுனராக யோகியாக்கார்த்தா சுல்தான் செயற்படுகின்றார். புவியியல்சாவகத்தின் தெற்குக் கடற்கரையின் அருகில் முற்றிலும் நடு-ஜாவா மாகாணத்தில் இந்தச் சிறப்புப் பகுதி அமைந்துள்ளது. 3,133.15 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இப்பகுதி இந்தோனேசியாவிலுள்ள மாகாணங்களில் இரண்டாவது சிறியதாகும். மெராபி சிகரம் யோக்யகர்த்தா நகருக்கும் சலேமன் பதிலாட்புலத்துக்கும் வடக்கே உள்ளது. 1548 முதல் தொடர்ந்து வெடித்துவரும் இது இந்தோனேசியாவிலுள்ள எரிமலைகளில் மிகத் தீவிரமானது. இந்த எரிமலை அண்மையில் அக்டோபர்-நவம்பர் 2010 ல் வெடித்த நிகழ்வில் பலர் காயமுற்றனர். மேலும் 100,000 குடிமக்கள் இடம்பெயர்ந்தனர்.[6][7] நிர்வாக பிரிவுகள்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி மாகாண மட்டத்தில் நான்கு பதிலாட்புலங்களாகவும் (இந்தோனேசிய மொழி: kabupaten ஆங்கிலம்: regencies) ஒரு நகரமாகவும் (kota) பகுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துயோக்யகர்த்தாவில் அடிசூசிப்டோ பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. லெம்புயங்கன் மற்றும் யோக்யகர்த்தா (டுகு நிலையம் என்றும் அழைக்கப்படும்) இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. தெற்கில் பான்டுல் பதிலாட்புலத்தில் இந்தோனேசியாவிலுள்ள பெரிய பேருந்து நிலையமான கிவாங்கன் பேருந்து நிலையம் உள்ளது. கல்வியோக்யகர்த்தாவில் 100 க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன.[8] இந்தோனேசியாவின் எந்தவொரு மாகாணத்தையும் விட அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளதால் யோக்யகர்த்தா மாணவர்கள் நகரம் ("kota Pelajar") எனப் பெயர் பெற்றது. இந்தோனேசியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகமான இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் யோக்யகர்த்தா சிறப்பு பகுதியில் 1945ல் நிறுவப்பட்டது. முதன்முதலில் நுண்கலைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமும் இந்தச் சிறப்பு பகுதியிலுள்ளது. புவி பாரம்பரிய தளங்கள்இந்தோனேசியாவில் யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் சக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திற்கான புவியியல் முகமை அறிவித்துள்ள ஒன்பது புவி-பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது.
பெர்பாவிலுள்ள குறுகிய டெங்கெங் ஆற்றின் கரையிலிருக்கும் பெரிய கரடுமுரடான கறுப்புப் பாறைகள் தனிச்சிறப்பு வாய்ந்தன. ஙலாங்கெரானிலுள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய எரிமலை ஒரு சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நட்றவுப்பகுதிகள்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி பின்வரும் பகுதி / மாநிலங்களுடன் மாகாண அளவில் சகோதர / நட்புறவு கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia